முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news B726

பொருளாதார நெருக்கடி சமூகப்பிரச்சினையாக மாற்றமடையும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமை சமூகப் பிரச்சினையாக மாற்றமடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பொருளியல் நிபுணருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் 10 கிலோ கிராம் பச்சை மிளகாய் மற்றும் 25 கிலோ கிராம் வெங்காயம் என்பன களவாடப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை என வர்த்தகர்கள் கூறியதாகவும், பொருட்களின் விலையேற்றம் சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கும் அபாயம் காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள விவசாய பிரச்சினை, பெருந்தொற்று நிலைமைகளினால் ஏற்பட்டது கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தினால் அரிசி விலையை கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசி, மரக்கறி உள்ளிட்ட விவசாய உற்பத்திகள் அசாதாரணமாக விலை உயர்ந்துள்ளதாகவும் ஏனைய பொருட்களின் மற்றும் சேவைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் உணவுப் பிரச்சினையை இந்த அரசாங்கம் உருவாக்கியது எனவும், தூரநோக்கற்ற தீர்மானங்களினால் இந்த நிலைமை உருவானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?