முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b757

பிரித்தானியா இலங்கை தொடர்பில் எடுக்கும் முயற்சி கடும் கண்டனத்திற்குரியது!
இலங்கையில் நீண்ட காலமாகத் தீர்வு வழங்கப்படாமல் தொடர்கின்ற வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் பிரித்தானியாவில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டின் மௌனமும், இலங்கையுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அவர் முன்னுரிமை வழங்கியுள்ளமையும் கடும் கண்டனத்திற்குரியவையாகும் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. அது மாத்திரமன்றி சர்வதேச நீதிப்பொறிமுறையின் ஊடாக தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரித்தானியா அரசாங்கம் உதவவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், அச்சங்கத்தின் பிரதிநிதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 11-01-2022 ஆம் திகதி செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்த பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். அது மாத்திரமன்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு, வடமாகாண, கிழக்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தார். இந்த சந்திப்புக்கள் தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்தி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளால் அமைச்சர் தாரிக் அஹமட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 13 ஆண்டுகளாக மிகவும் அவமரியாதைக்குரிய வகையில் நடத்தப்பட்டு வருகின்ற அதேவேளை, நீங்கள் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் பேசுகின்றீர்கள். பாதிக்கப்பட்டவர்கள் மீதான கருணையின்றி, தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவரும் அரசாங்கத்துடனான தொடர்புகளைப் பேணுவதற்கே நீங்கள் முன்னுரிமை அளிக்கின்றீர்கள் என்பது நீங்கள் வெளியிட்ட கட்டுரையின் மூலம் தெளிவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் பிரகாரம் அதிகளவிலான காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும் இலங்கையில் மிகமுக்கிய பிரச்சினையாகக் காணப்படக்கூடிய வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் அந்தக் கட்டுரையின் எந்தவொரு இடத்திலும் நீங்கள் பிரஸ்தாபிக்கவில்லை அல்லவா? குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப்போரின்போது, அன்பிற்குரியவர்களை இழந்த தமிழ்க்குடும்பங்களை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். ஜெனீவா பொறிமுறையின் ஊடாக கடந்தகால சம்பவங்களை அணுகுவதற்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அதேவேளை மறுபுறம் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?