முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b753

“தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட பெரும் சதி” முறியடிக்க தயாராகும் கஜேந்திரகுமார் தரப்பு
13ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட சதி. அந்த சதியை நாங்கள் மக்களாலேயே முறியடிக்க வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்தார். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி மிக மோசமாக ஆவணம் தயாரிக்கப்பட்ட நிலையில், அதன் மூலம் சுயநிர்ணய உரிமையை தமிழ் மக்கள் அனுபவிக்கலாம் எனக் கூறுமளவுக்கு இந்த துரோகத்தனம் போகின்றது. புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுகின்ற பொழுது 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோருவது, இனப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாக உலகத்துக்கு காட்டும் நடவடிக்கையே ஆகும். இந்த விடயத்தை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். நாம் மீண்டும் மீண்டும் கூறுவதென்றால் இந்திய முகவர் அமைப்புக்கள் 12 வருடங்களாக மக்களிடம் பொய் சொல்லியதை இன்று உணரக்கூடியதாக உள்ளது. 13ஆம் திருத்தத்திற்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடங்குவதாக 12 வருடத்துக்கு முன் நாங்கள் சொன்ன பொழுது மக்கள் அதனை நம்பவில்லை. இன்று அதனை வெளிப்படையாக நிரூபிக்கும் வகையிலேயே காரியங்கள் நடைபெறுகின்றன. ஒரு தேர்தல் முடிவடைந்து இன்னொரு தேர்தல் நடக்க இன்னும் சில வருடங்கள் இருக்கும் நிலையில் இலங்கை முகவர்கள், இந்திய முகவர்கள் இணைந்து 13ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்கின்ற நிலை உருவாகியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆணையை பெற்ற தமிழ் தரப்பும் 13ஆம் திருத்தத்தையும் ஒற்றையாட்சியையும் ஏற்றுக் கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களை அணிதிரட்ட முடிவெடுத்து இருக்கின்றது. அந்த வகையிலே எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி போராட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள இருக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதனைக் கொண்டு செல்ல இருக்கின்றோம். இதனை முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் செய்ய இருக்கிறோம். இதனை கிராம ரீதியாகவும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். எமது கட்சி உறுப்பினர்கள் மூலம் கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்தும் உறுதியாக இருக்கின்ற அனைத்து மக்களையும் அரவணைத்து இதனை நாங்கள் மேற்கொள்வோம். 13ஆம் திருத்தம் தமிழ் மக்களுக்கு உருவாக்கப்பட்ட சதி. அந்தச் சதியில் இருந்து முப்பது வருடங்களுக்கு மேலாக உயிர்த்தியாகம் செய்து ஏதோ ஒரு வகையில் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றோம். இந்த சதியை நாங்கள் மக்களாலேயே முறியடிக்க வேண்டும்” என்றார். தமிழர்களின் ஆலோசனை தம்பி கஜேந்திரன் தாங்கள் எடுத்த முடிவு மிகவும் சிறந்ததாகக் கருதப்படுவதால் இத்தகவலை ஒவ்வொரு மாவட்டங்களிற்கும் கொண்டு செல்வதோடு மட்டும் மின்றி அவ் மாவட்டங்களிலும் ஆற்பாட்டங்களை மேற்கொள்ளவும் 30 வருடமாக இரத்தம் சிந்திய மக்கள் உனது கருத்தை கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள் எவ்விதமான கவலைகளையும் விட்டு தள்ளி துரோகத்தில் இருந்து தமிழீழ மண்ணை காப்பாற்று அங்கே தான் எமது ஐம்பதினாயிரம் மாவீரர்களின் செங்குருதியும் உறைந்து கிடங்கின்றது. வாழ்க வளமுடன் தொடரட்டும் உனது பணி

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?