முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 555 மாவீரர் நாள் 2023கனடாவில் இருந்து மாவீரர் புதிய பாடல் | Tha Prophecy - M...

மாவீரர்களை தொடர்ந்து வணங்க வேண்டும் எத்தக் காலத்திலும் மறக்கக் கூடாது புதிய பாட்டை எழுதிய தமிழன்,

e 554 இந்தியாவிற்கு தேவை பிரபாகரனின் ஆதாரம்! துவாரகா அல்ல | #udaruppu

துவாரகாவின் இறப்புச் சான்றிதழால் வெடித்தது பெரும் சர்ச்சை (Video)  By Sheron  6 மணி நேரம் முன்             Report விளம்பரம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் இறப்பு சான்றிதழை உரிய விதத்தில் கோராமை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்படுவதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலக தமிழர் வரலாற்று மையம் ஆகிய மூன்று அமைப்புக்களும் போலி துவாரகா என்ற காணொளி தொடர்பில் மௌனம் காத்து வருகிறது. இந்த மூன்று அமைப்புகளையும் நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றேன். இந்த விவகாரம் குறித்து எவ்வித கேள்விகளையும் எழுப்பாத காரணத்தினால் இவர்களை நான் மிகவும் பயந்தவர்களாகவே கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்

e 553 ஆங்கில மொழி மூலம் அதிவிஷேட சித்திகளைப் பெற்ற யாழ் மாணவி!

  ஆங்கில மொழி மூலம் அதிவிஷேட சித்திகளைப் பெற்ற யாழ் மாணவி!  By Kirushanthi  3 மணி நேரம் முன்             விளம்பரம்   கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2022(2023) ஆம் ஆண்டிற்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. இந் நிலையில் யாழ் மாவட்ட மாணவி அனைத்துப் பாடங்களிலும் அதிவிஷேட சித்திகளைப் பெற்றுள்ளார். அதிவிஷேட சித்திகளைப் (9A) பெற்ற மாணவியான அபிவர்ஷினி ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும். மாணவியின் பெற்றோர் அகம் நெகிழ்ந்து வாழ்த்துக்களையும் வெற்றிக்குத் துணை புரிந்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர். 

e 552 இந்தியவின் போலி நிகழ்ச்சி நிரலை முழுமையாக எதிர்த்த திரு உமாபதி?.

போலிதுவாராகா பிம்பத்தை உடைத்த புலம்பெயர் தமிழர்கள்! (காணொளி)பின்னால் இருப்பது அந்த டூவாக்கூறுதான் வாலசிக்கத்திற்குத் தேனீர்வைத்துக் கொடுத்தவர் இப்படி சிந்திப்பது தவறு?  By Beulah  9 மணி நேரம் முன்             விளம்பரம் தாமாகவே பிரபாகரன் குடும்பத்தை உருவாக்கி, அவர்கள் தங்களுடன்தான் பாதுகாப்பாக உள்ளனர், தம்மையே அதிகம் நம்புகின்றனர் என கூறி உலகளவில் இருக்கும் ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை சுவீகரித்து, அவர்களிடமிருந்து பணத்தை வசூலித்து மிகப்பெரிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சியே  கடந்த 27 ஆம் திகதி  வெளிவந்த காணொளியின் பின்புலம் என பத்திரிக்கையாளரான உமாபதி தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம் திகதி  துவாரகா  என காணப்படும் பெயரோடு காணொளி தொடர்பில் இன்றைய(30) ஐபிசி தமிழின் மெய்பொருள் நிகழ்ச்சியில் ஊடகவியலாளரினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மேற்படி விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்களையும், தெளிவுப்படுத்தல்களையும் காணொளியின் வாயிலாக காண்க.

e 551 தமிமீழப்பகுதியில் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்படும் தமிழர்கள்

  தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்: தம்பதியினர் வெட்டி படுகொலை (படங்கள்)  By Shadhu Shanker  24 நிமிடங்கள் முன்             விளம்பரம்  வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று(30) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைசேர்ந்த பசுபதி வர்ணகுலசிங்கம் வயது 72 என்ற முதியவரும், அவரது மனைவியான 68 வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் இருந்த மற்றுமொரு கைதி மர்ம மரணம்! சரச்சையை கிளப்பும் தொடர் பலிகள்   இரத்தவெள்ளத்தில் சடலம் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், செட்டிகுளம் பிரதான வீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபாரநிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவருகின்றனர். இந்நிலையில் நேற்றயதினம்(29) இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபாரநிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த தம்பதிகள் வியாபாரநிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தி

e 550 திருமதி பிரபாகரனை சூழ்ந்து வந்த ஆபத்துக்கள் | Unmaiyin Tharisanam | IBC ...

தலைவரின் மறக்க முடியாத வரலாறுகள்

e 549 பளையில் பயங்கர விபத்து சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

  பளையில் பயங்கர விபத்து சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!  By Shankar  4 மணி நேரம் முன்             விளம்பரம் பளையில் உள்ள புலோப்பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.   இச்சம்பவம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் இன்றைய தினம் (29-11-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பளை நகர பகுதியிலிருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. இச்சம்பவத்தில் பளை நகரம் பளையை சேர்ந்த 20 வயதான குணம் கணேசன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் பளை வைத்தியசாலை கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.