முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 838 இலங்கை இளைஞர் சடலமாக மீட்பு!

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்பு
! ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் இலங்கைப்பின்னணிகொண்ட இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் Tranmere Point கரையோரத்தில், இன்று பிற்பகல் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 18-25 க்கு இடைப்பட்ட வயதுடைய குறித்த இளைஞர், இலங்கைப்பின்னணி கொண்டவர் என நம்பப்படுகிறது. இன்று பிற்பகல் 1:30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்ட இவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். Advertisement குறித்த இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. எனினும் இம்மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என்று நம்பப்படுகிறது. கருப்பு ஜீன்ஸ், அடர் பச்சை நிற t-shirt மற்றும் கருப்பு puffer jacket ஆகியவற்றை இவர் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இளைஞர் வேறொரு இடத்தில் தண்ணீரில் விழுந்திருக்கலாம் எனவும், அவரது உடல் பின்னர் Tranmere Point பகுதியை வந்தடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. குறித்த பகுதியில் மீட்புப் பணியை மேற்கொள்வது மிகவும் கடினமாக காணப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 131 444 என்ற எண்ணில் ESCAD 168-21052023 என்ற குறிப்பு எண்ணுடன் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?