ஆஸ்திரேலியாவிற்கு படகுப்பயணம் மேற்கொண்ட 41 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்!
ஆஸ்திரேலியாவிற்கு படகுப்பயணம் மேற்கொண்ட மற்றுமொரு தொகுதியினர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
Australia deports 41 Sri Lankans. File Image
ஆஸ்திரேலியாவிற்குள் படகுமூலம் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயன்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த 41 பேரும் விசேட விமானம் மூலம் நேற்று காலை (மே 09) 9.40 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Advertisement
இவர்கள் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி ஆஸ்திரேலிய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை நாடு கடத்தும் பயணத்தில் பல ஆஸ்திரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தடன் குறித்த 41 பேரும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதன்போது கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய துணை தூதரகத்தின் மூன்று உயர்மட்ட அதிகாரிகளும் விமான நிலைய வளாகத்திற்கு சென்றிருந்தனர்.
இதேவேளை 41 பேரும் விமானநிலையத்துடன் இணைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
READ MORE
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்