முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 792 இலங்கையெர்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரிப்பு

வெளிநாடு ஒன்றில் இலங்கை மாணவன் சடலமாக மீட்பு
பெலாரஸில் உள்ள மருத்துவ பீடமொன்றில் கல்வி கற்கும் இலங்கை மருத்துவ மாணவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (29) மாணவர் விடுதியில் உள்ள அறையொன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெலாரஸ் நாட்டில் உள்ள மருத்துவ பீடமொன்றில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 24 வயதான மருத்துவ மாணவர், அந்த வருடத்தின் சிறந்த மருத்துவ மாணவராக தெரிவு செய்யப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தாயார் அழைப்பு எடுத்த போதிலும் வெளிநாடு ஒன்றில் இலங்கை மாணவன் சடலமாக மீட்பு | Sri Lanka Medical Student Died In Belarus கண்டி பிரதேசத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியொன்றில் உயர்தர உயிரியலை பயின்ற இம்மாணவன் பெலாரஸ் நாட்டில் உள்ள மருத்துவ பீடத்தில் சேர்ந்துள்ளார். மாணவனின் தாயார் கடந்த சனிக்கிழமை தனது மகனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தபோது, ​​அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என தாயார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தாயார், தனது மகனின் நண்பர்கள் பலரை அழைத்து, தனது மகனுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தும் அவர் பதிலளிக்காததால், அவரை பார்க்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளது. அறைக்கு சென்ற மாணவர்கள் கண்ட காட்சி வெளிநாடு ஒன்றில் இலங்கை மாணவன் சடலமாக மீட்பு | Sri Lanka Medical Student Died In Belarus சக மருத்துவ மாணவர்கள் அவர் தூங்கிய அறைக்கு சென்று தேடினர். மருத்துவ மாணவனின் கழுத்தில் கட்டு ஒன்றும், அறையிலுள்ள உயரமான அலுமாரியில் மறுமூலையில் கட்டப்பட்ட கயிறும் காணப்பட்டது. இது குறித்து மருத்துவ மாணவர்கள் மாணவனின் தாயாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மருத்துவ மாணவனின் மரணம் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்பது இதுவரையில் தெரியவரவில்லை என அந்த வட்டாரங்கள் மூலம் மேலும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இலங்கை மருத்துவ மாணவர் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி வரை தனது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியதாகவும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?