முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 584 சிங்கள வெறியர்களின் உன்மையான பாசம் இதுதான் தமிழர்களே புரிந்து கொள்ளுங்கள்,

சூதாட்டத்தில் தந்தை - 16 வயது மாணவிக்கு நிகழ்ந்த பரிதாபம்..
! அகலவத்த காவல்துறை பிரிவுக்குற்பட்ட பகுதியில் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக தன்னுடைய மகளையே விற்ற தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்குச் செல்லும் 16 வயதான மாணவியே இவ்வாறு விற்கப்பட்டுள்ளதாக அகலவத்த காவல்துறை சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் அறிவித்துள்ளனர். கலவானை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளி, அச்சிறுமியை ஒருவருடமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. அம்பலமாகிய குற்றச்செயல் சூதாட்டத்தில் தந்தை - 16 வயது மாணவிக்கு நிகழ்ந்த பரிதாபம்..! | Father Compensates His Daughter For Gambling வட்டிக்கு பணம் கொடுக்கும் குறித்த முதலாளி, சிறுமிக்கு தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ள நிலையில் அந்த தொலைபேசி உறவினர் ஒருவரின் கைகளுக்கு சிக்கியதை அடுத்தே இந்தக் குற்றச்செயல் அம்பலமாகியுள்ளது. மேலும், அந்த சிறுமி, தன்னுடைய மாமாவினால் இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சந்தேகநபரான தந்தை, நேற்று செவ்வாய்க்கிழமை (30) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியும், சிறுமியின் மாமாவும் பிரதேசத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். தாயும், தந்தையும் வீட்டுக்குள்ளேயே பல வருடங்களாக சூதாட்டத்தை நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூதாட்டத்துக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியான கலவானையைச் சேர்ந்த 38 வயதானவர், அவ்வப்போது இந்த வீட்டுக்கு வந்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேகநபரான தந்தை, சூதாடுவதற்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் முதலாளியிடம் பெற்ற பணத்துக்காக தன்னுடைய மகளையே பாலியல் செயற்பாட்டுக்காக வட்டி முதலாளியிடம் அனுப்பிவைத்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?