தமிழர் பகுதியில் அழிக்கப்பட்டுள்ள 125 ஏக்கர் காணி - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வன ஒதுக்குக் காடு தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ளதுடன், வனவள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என காட்டுப்பகுதியினை அண்டியுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மக்களின் குற்றசாட்டு
தமிழர் பகுதியில் அழிக்கப்பட்டுள்ள 125 ஏக்கர் காணி - கண்டுகொள்ளாத அதிகாரிகள்! | 125 Acres Land Completely Destroyed In Tamil Area
"காணி அற்ற நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் குறித்த கிராமத்தில் வசித்து வருகின்றார்கள்.
வாழ்வாதாரத்துக்காக பற்றைக் காடுகளைத் துப்புரவு செய்து உழுந்து விதைத்தாலே உடனடியாக வனவள அதிகாரிகள் கைது செய்து எம்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தண்டனை வாங்கி தருவார்கள்.
ஆனால் தற்போது நூறு ஏக்கருக்கு மேல் காடுகள் அழிக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு வனவள அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை எமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது.
அதிபரின் கவனத்திற்கு
தமிழர் பகுதியில் அழிக்கப்பட்டுள்ள 125 ஏக்கர் காணி - கண்டுகொள்ளாத அதிகாரிகள்! | 125 Acres Land Completely Destroyed In Tamil Area
அத்துடன் குறித்த பகுதி ஒதுக்குக்காடு என்பதனால் இதனைத் துப்புரவு செய்வதற்கு சிறிலங்கா அதிபர், அமைச்சரவை, காணி ஆணையாளர், காணி அமைச்சர் ஆகியோரின் அனுமதி கட்டாயம் தேவையான ஒன்றாகும். இவை எவையுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் காணப்பட்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபனிடம் மக்கள் தெரியப்படுத்தியதையடுத்து, அதிபரின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்று தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்." இவ்வாறு அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்