இராணுவத்தினரை எழுப்ப உண்ணா விரதம்..! மாவீரர்களின் பெற்றோர் எடுத்த முடிவு
இராணுவம் ஆக்கிரமித்துள்ள அளம்பில் மாவீரர் இல்லத்தை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என மாவீரர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தை ஆக்கிரமித்து 23 ஆவது சிங்க படையணி முகாம் அமைந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாவீரர்களின் பெற்றோரே இவ்வாறு கூறியுள்ளனர்.
"எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இடத்தில் இராணுவத்தினர் விவசாயம் செய்கிறார்கள், கிரிக்கெட் விளையாடுகிறார்கள், உணவகம் நடத்துகிறார்கள்.
உண்ணாவிரத போராட்டம்
இராணுவத்தினரை எழுப்ப உண்ணா விரதம்..! மாவீரர்களின் பெற்றோர் எடுத்த முடிவு | Ltte Last War Memories Hunger Strike
எங்கள் பிள்ளைகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துவதற்கு அவர்கள் உடனடியாக கல்லறையை விட்டு வெளியேற வேண்டும்."என்று முத்தையன்கட்டை சேர்ந்த முருகையா இராசையா என்ற மாவீரரின் தந்தை தெரிவித்தார்.
அதேவேளை, "எங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களின் ஆத்மா சாந்தியடையவும், தீபம் ஏற்றவும் முடியாமல் கடும் மன உளைச்சலில் வாழ்கிறோம்" என மட்டக்களப்பை சேர்ந்தவரான மாவீரர்களின் தாய் தயாளினி தெரிவித்தார்.
மேலும், அளம்பில் மாவீரர் மயானம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுத் தரவேண்டும். விதைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு பெற்றோர்களும் உறவுகளும் அஞ்சலி செலுத்தும் வகையிலும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நிறைவேற்றத் தவறினால் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
25 மாவீரர் துயிலும் இல்லங்கள்
இராணுவத்தினரை எழுப்ப உண்ணா விரதம்..! மாவீரர்களின் பெற்றோர் எடுத்த முடிவு | Ltte Last War Memories Hunger Strike
தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி வீரச் சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் நவம்பர் 27ஆம் திகதி நினைவுகூரப்ப டுவது வழக்கம். விடுதலைப் புலிகளின் காலத்தில் மிகச்சிறப்பாக இந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
எனினும், இறு திப் போர் முடிவுக்கு வந்த பின்னர், மாவீரர்களை நினைவேந்த தடை விதிக்கப்பட்டது. எனினும், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் முதல் இந்தத் தடை நீக்கப்பட்டாலும் இராணுவத்தின் அடக்கு முறைகள் தொடர்கின்றன.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்