முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 267

 என் கர்பத்திற்கு காற்று தான் காரணம்: 15 நிமிடங்களில் பிள்ளையும் பிறந்தது எப்படி ? உலகமே ஆச்சரியத்தில் உடலுறவு கொள்ளாமல் குழந்தை பிறப்பது சாத்தியமா? என்ற கேள்விக்கான பதில் இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது..!உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்ரர் நெட் உலகம் இல்லை என்றால் எதுவும் எங்களுக்கு தெரிய வராது என்பது தான் உண்மை.   இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியின் சியாஜூர் பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் சிதி சைனா (Siti Zainah). இவர் எப்பவும் போல சம்பவத்தன்று, பிரார்த்தனையை முடித்துவிட்டு, வீட்டில் வந்து உட்கார்ந்துள்ளார். தரையில் முகத்தை கீழே சாய்த்தவாறு படுத்திருந்திருக்கிறார். அப்போது, திடீர் என ஒரு காற்று (wind) அவரின் பிறப்புறுப்பு (vagina) வழியாக சென்று அவரின் வயிற்றை நிரப்பியுள்ளது. சற்று நேரத்தில் அவரது வயிறு பெரியதாக ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, அடுத்த 15 ஆவது நிமிடத்தில் அவருக்கு ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்த குழந்தை 2.9 கிலோகிராம் எடை கொண்டது. இந்த கர்ப்பத்துக்கு (pregnancy) காரணம் காற்று என்றும், உடல

TAMIL Eelam news 266

  யாழ்.இணுவில் கந்தசுவாமி கோவில் பூசகரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு!  யாழ்.இணுவில் கந்தசுவாமி கோவில் பூசகரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு நபர் ஒருவர் சென்ற விடயம் சீ.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. இந் நிலையில் குறித்த நபர் துரத்தி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அத்துடன் அவர்கள் களவாடிச்சென்ற மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் பூசகரின் மோட்டார் சைக்கிளை திருடியவர் ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது.

TAMIL Eelam news 265

 வயதில் மூத்த சினேகா.. பிரசன்னாவை விட எத்தனை வயசு வித்தியாசம் தெரியுமா? பிரபலங்களைப் பொறுத்தவரை எப்போதுமே வயதைப் பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் வயதைத் தாண்டி அவர்கள் காதலைத்தான் நம்புவார்கள் அந்த வகையில் தற்போது சினேகாவை விட பிரசன்னா சிறிய வயது உடையவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.   தமிழ் சினிமாவில் பல நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் அந்த வரிசையில் இடம்பிடித்து உள்ளவர்கள் சினேகா மற்றும் பிரசன்னா இவர்கள் இருவரும் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்னும் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சினேகாவிற்கும், பிரசன்னாவிற்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதாவது ஆண் குழந்தைக்கு விகான் என்றும் பெண் குழந்தைக்கு ஆத்யந்தா பெயர் வைத்துள்ளனர். தனக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தால் ஆத்யந்தா என்ற பெயர்தான் வைக்க வேண்டும் என முடிவு செய்து இருந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக முதலில் ஆண் குழந்தை பிறந்ததால் அந்த பெயரை வைக்க முடியாமல் விகான் என பெயர் வைத்ததாகவும் பின்பு நாங்கள் ந

TAMIL Eelam news 264

 ஜெனிவாவில் மீண்டும் ஏமாற்றம்? ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் நகல் வெளிவந்திருக்கின்றது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்த அனைவருக்கும் கடும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இந்த நகல் பிரேரணை அமைந்திருக்கின்றது. கடந்த வருடங்களில் ஏமாற்றப்பட்டதைப்போல இந்த வருடமும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படப் போகின்றார்கள் என்பதற்கான ஒரு முன்னறிவித்தலாக இந்தப் பிரேரணை அமைந்திருக்கின்றது. ஜெனிவா கூட்டத் தொடர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் இம்முறை ஏற்படுத்தியிருந்தமைக்கு பல காரணங்கள் இருந்தன. பொறுப்புக் கூறல் உள்ளிட்ட நிலைமாறு கால நீதியை நிலைநாட்டுவதற்கு தொடர்ச்சியாக சிறீலங்காவிற்கு வழங்கப்பட்டுவந்த கால அவகாசம் முடிவுக்கு வருகின்றது என்பது முதலாவது காரணம். கால அவகாசத்தைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்ட சிறீலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறல் என்பன உட்பட்ட விடயங்களில் ஆக்கபூர்வமான எந்த ஒரு செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை என்பதை மனித உரிமைகள் பே

TAMIL Eelam news 263

 தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அந்தக் கட்சியின்   செயலாளர் செ. கஜேந்திரன். தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேசின. ஆரம்பத்தில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இந்தப் பேரவையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இணைந்து பயணிக்குமா? என்று அந்தக் கட்சியின் செயலாளர் செ. கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டது. இதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டம் வெற்றிகரமாக மக்கள் எழுச்சி போராட்டமாக இடம் பெற்றது. இதற்கு தமிழ் அரசுக் கட்சியும் ஆதரவளித்தது. ஆனால், இந்தப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் விதமாக பச்சைத் துரோகத்தனமாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இன்று தமிழ் மக்களுக்கு பலவீனமான ஐ. நா. வின் அறிக்கை ஒன்று வந்துள்ளது என்றால் அதை முழுமையாக தமிழ் அரசுக் கட்சிதான் ஏற்க

TAMIL Eelam news 262

 என் பொண்டாட்டி போனதற்கு ஷிவானி காதல் காரணம் இல்ல! புலம்பும் 30 வயது நடிகர் சமீபத்தில் பிரபல சீரியல் நடிகர் ஒருவரின் மனைவி, அவர் சீரியல் நடிகையும் பிக்பாஸ் பிரபலமான சிவானியுடன் இருந்த தொடர்பு காரணமாக அந்த நடிகரை விவாகரத்து செய்து விட்டதாக தகவல்கள் காட்டுத் தீ போல பரவின.   பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் ஜோடியாக நடித்தவர்கள் ஆசீம் மற்றும் ஷிவானி நாராயணன். பிஞ்சிலேயே பழுத்த சிவானி ஆசீமுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியான. ஆனால் அது குறித்து இருவரும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் ஆசீம் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் சிவானியால் அடிக்கடி சண்டை வந்ததாக தெரிகிறது. அதனால்தான் அவரது மனைவி சமீபத்தில் அவரை விவாகரத்து செய்ததாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் அசீம் அதை முற்றிலும் மறுத்துள்ளார். எனக்கும் என் மனைவிக்கும் சொந்த கருத்து வேறுபாடு காரணமாக தான் விவாகரத்து நடை பெற்றது எனவும், சிவானிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிவானி மற்றும் என்னையும் நிம்மதியாக வாழ விடுங்கள் எனவும்

TAMIL Eelam news 261

 இனத்தை காப்பாற்றுவதா… மொழியை காப்பாற்றுவதா? ” தாய்மொழி தினம்” ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை முதலில் அழிக்க வேண்டும். ஒரு மொழியை அழிக்க வேண்டுமானால், அந்த மொழிக்கான மொழி மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கலப்பதற்கான ஒரு அரிய நூல்களை அழிக்க வேண்டும் என்ற வாசகம் வரலாற்று ராஜதந்திரங்களிலே காணப்படுகிறது. தமிழில் எண்ணற்ற ஓலைச்சுவடிகள் மொழி ஆதிக்கத்தின் காரணமாக பழங்காலத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. மொழி அழிய காரணங்கள் அழியும் நிலையில் உள்ள மொழிகள் என்று அவ்வப்போது சில மொழிகளின் பட்டியல் அநுமானங்களின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்தும் இருக்கின்றன. ஆனால், அது எந்த மொழியின் வளர்ச்சிக்கும் பயன்பட்டதில்லை. மகாகவி பாரதியின் கவலை தன் காலத்தில் ஆங்கிலேய ஆதிக்கத்தை பார்த்த, மகாகவி பாரதியார் ஒரு பாடலில் “மெல்ல தமிழ் இனி சாகும் என ஒரு பேதை கூறுகிறான்” என்று தனது கலக்கத்தை வெளிப்படுத்தினார். அதை தடுப்பதற்கான வழிமுறையாக, “எட்டுத் திக்கும் செல்வோம் கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்போம்!” என்று தமிழில் முதல்தர படைப்புகளும் மொழிபெயர்ப்பு நூல்