யாழில் தகாத உறவால் உயிரிழந்த பெண்; பொலிஸார் பகீர் தகவல்
![யாழில் தகாத உறவால் உயிரிழந்த பெண்; பொலிஸார் பகீர் தகவல் | Woman Dies Inappropriate Relationship Jaffna யாழில் தகாத உறவால் உயிரிழந்த பெண்; பொலிஸார் பகீர் தகவல் | Woman Dies Inappropriate Relationship Jaffna](https://cdn.ibcstack.com/article/8d626077-078b-491f-9a43-7dcd6de4af83/24-665d9ec5e07e1.webp)
யாழில் திருமணத்தை மீறிய காதல் தொடர்பு வைத்திருந்த பெண் சவக்காலைக்குள் காதலனால் தலையில் பெற்றோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பெண்ணின் கொலை தொடர்பில் பொலிஸார் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தாயின் கல்லறை மீது சத்தியம்
அதன்படி தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறேன்" என பெண்ணை சேமக்காலைக்கு அழைத்து சென்றே இளைஞன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்குள் வைத்து, கடந்த (1) சனிக்கிழமை பெண்ணொருவரை, இளைஞன் ஒருவர் உயிருடன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்தை மீறிய காதல் தொடர்பு சுமார் ஐந்து வருட காலமாக இளைஞனுடன் இருந்துள்ளது.
இந்நிலையில் இளைஞன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு முயன்றதை அறிந்து, இளைஞன் தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை குறித்த பெண்ணை மட்டுவில் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வரவழைத்து , சேமக்காலையில் உள்ள தனது தாயின் கல்லறை மீது "உன்னையே திருமணம் செய்வேன்" என சத்தியம் செய்கிறேன் என சேமக்காலைக்குள் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு , தாயின் கல்லறைக்கு அருகில் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண் மீது பெற்றோலை ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ளார்.
பெண்ணை படுகொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம்(2) முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்