முல்லைத்தீவில் கடற்றொழிலில் ஈடுபட்ட நபர் நீரில் மூழ்கி பலி
![முல்லைத்தீவில் கடற்றொழிலில் ஈடுபட்ட நபர் நீரில் மூழ்கி பலி | A Person Engaged In Fishing In Mullaitivi Drowned முல்லைத்தீவில் கடற்றொழிலில் ஈடுபட்ட நபர் நீரில் மூழ்கி பலி | A Person Engaged In Fishing In Mullaitivi Drowned](https://cdn.ibcstack.com/article/b9e7f2be-dc38-4bff-baf1-2103b1b9d20c/24-665c9495e1b0e.webp)
By Sahana 8 hours ago
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலே இன்று (2024.06.02) காலை கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் திடீரென கடலுக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளார் உயிரிழந்த நபர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிவனு சிவகுமார் என்பவராவார்.
குறித்த நபரின் சடலத்தை இன்று மாலை வருகை தந்து பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி S.H .Mahroos உடல் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்
தற்போது சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்