திடீரென புகுந்த வாள்வெட்டு கும்பல்; 7 பேர் மருத்துவமனையில்; அச்சத்தில் மக்கள்!
![திடீரென புகுந்த வாள்வெட்டு கும்பல்; 7 பேர் மருத்துவமனையில்; அச்சத்தில் மக்கள்! | Akkaraipattu Swordsmen Burst People In Hospital திடீரென புகுந்த வாள்வெட்டு கும்பல்; 7 பேர் மருத்துவமனையில்; அச்சத்தில் மக்கள்! | Akkaraipattu Swordsmen Burst People In Hospital](https://cdn.ibcstack.com/article/b30ff4e0-54e9-48df-b0ce-8193c0c913fc/24-665af1eebef45.webp)
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாச்சிக்குடா பகுதியில் நேற்றிரவு (31) இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் 7 பேர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்தில் சில பொதுமக்கள் தாக்குதலுக்குள்ளானதுடன் வீடொன்றில் இருந்த பொருட்கள் சிலவும் அடித்து நொறுக்கப்பட்டதுடன் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள்களும் சேதத்திற்குள்ளாகியது.
சகோதரி விட்டில் தஞ்சம் புகுந்தவர் மீது தாக்குதல்
இதனால் வாச்சிக்குடா பகுதியில் வாழும் மக்கள் பெரும் அச்சம் அடைத்துள்ளனர். தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
வாள்கள் தாங்கிய சிறு குழுவானது ஒருவரை விரட்டி வந்த நிலையில் ஓடிவந்த நபர் தனது சகோதரி வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இதன் காரணமாக அவ்வீட்டினுள் நுழைந்து வாள் தாங்கிய குழுவானது அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதன்போது அவ்வீட்டில் இருந்தவர்கள் வாள் வெட்டிற்கு இலக்கானதுடன் சத்தம் கேட்டு வீட்டினுள் நுழைந்த அயல் வீட்டார் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம் வீதியில் சென்றவர்கள் மீதும் குறித்த குழுவினர் சரமாரியான தாக்குதல் மேற்கொண்டதுடன் வீதியில் இருந்த மோட்டார் சைக்கிளும் தாக்கப்பட்டுள்ளது.
திடீர் தாக்குதலால் செய்வதறியாது நிலை தடுமாறிய பொதுமக்கள் சிலர் தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளித்தனர்.
சுமார் 30 நிமிடம் வரை நீடித்த இச்சம்பவத்தினால் அப்பிரதேசமே அதிர்ச்சியில் உறைந்து போனதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
இதன் பின்னராக அங்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிசார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்