முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 683 கனடாவை சேர்ந்த இருவருக்கு யாழில் விளக்கமறியல்

 

கனடாவை சேர்ந்த இருவருக்கு யாழில் விளக்கமறியல்

கனடாவை சேர்ந்த இருவருக்கு யாழில் விளக்கமறியல் | A Canadian Was Arrested In Jaffna
 By Kajinthan 3 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

கனடா (Canada) வதிவிட உரிமையை கொண்ட புலம்பெயர் நபர் ஒருவரையும் அவரது மகனையும் குடும்ப தகராறு காரணமாக விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

குறித்த நபர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் (Jaffna)  - கோப்பாய் பகுதிக்கு வருகை தந்து அங்கு தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபரின் அண்ணா முறையான ஒருவர் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்ற நிலையில், அவரை பார்ப்பதற்காக அங்கு சென்ற நபர், அவரின் சொத்தினை பெறுவதற்கு முயற்சித்துள்ளார். 

யாழில் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்ட இளைஞர்! சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் : கஜேந்திரன் குற்றச்சாட்டு

யாழில் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்ட இளைஞர்! சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் : கஜேந்திரன் குற்றச்சாட்டு

முறைப்பாடு பதிவு 

இந்நிலையில், சுன்னாகத்தை சேர்ந்த அண்ணா முறையான நபரின் மகளின் கணவனுக்கும் கனடாவைச் சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து, இரு தரப்பினரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

மேலும், இரு தரப்பினரையும் விசாரணைக்குட்படுத்தி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை கனடாவை சேர்ந்த நபரையும் அவரது மகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

இலங்கை விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை

இலங்கை விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை

அச்சுறுத்தும் செயற்பாடு 

இந்நிலையில், விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் குறித்த வழக்கானது நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

கனடாவை சேர்ந்த இருவருக்கு யாழில் விளக்கமறியல் | A Canadian Was Arrested In Jaffna

இதன்போது, கனடாவைச் சேர்ந்தவர், மல்லாகம் நீதிமன்ற வளாகத்தில் வைத்து எதிர் தரப்பு சட்டத்தரணியுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். 

இந்நிலையில், சட்டத்தரணி தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததையடுத்து கனடாவை சேர்ந்த நபரை தெல்லிப்பழை பொலிஸார் கைது செய்து பின்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?