முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 682 இழுபறி நிலையில் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா

 

இழுபறி நிலையில் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா

modi-swearing-ceremoney-delay-
 By Shadhu Shanker 11 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi)பதவியேற்பு விழா எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சுக்களுக்கான பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில் 8ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடம் ஒதுக்குவது? பாஜக வில் யார் யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது குறித்தான ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர்

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர்

மோடியின் பதவியேற்பு

கூட்டணியில் அமைச்சுக்களுக்கான பங்கீடு நிறைவு பெற்ற பிறகு பதவியேற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமைக்குள்அமைச்சுக்களுக்கானபங்கீட்டை இறுதி செய்ய பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.

இழுபறி நிலையில் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா | Pm Modi S Oath Ceremony Delay

எனவே, சனிக்கிழமைக்குள் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடு முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை மோடி பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 3 முக்கிய மத்திய மந்திரி பதவிகளையும், ராஜாங்க மந்திரி பதவிகளையும் அவர் எதிர்பார்த்து பாஜக மூத்த தலைவர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

மோடியின் வெற்றியால் இந்தியாவிற்கு அடிமையாகும் இலங்கை: அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

மோடியின் வெற்றியால் இந்தியாவிற்கு அடிமையாகும் இலங்கை: அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

ஒத்திவைப்பு

அதேபோல், லோக்ஜன சக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வான், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி, சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜிதன் ராம் ஆகியோரும் தலா ஒரு மந்திரி பதவி கேட்கிறார்கள்.


சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் முக்கிய இலாகாக்களை கேட்டாலும், பாரதிய ஜனதா கட்சி 6 முக்கிய அமைச்சகத்தை விட்டுக் கொடுக்க மறுத்துள்ளது.

தொடருந்து, உள்துறை, நிதி, பாதுகாப்பு, சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய 6 துறைகளையும் யாருக்கும் ஒதுக்க இயலாது என மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?