முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 681 நீங்கள் கணினி அதிகம் பார்ப்பவரா?

 

நீங்கள் கணினி அதிகம் பார்ப்பவரா? கண்ணில் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இதை செய்தாலே போதும்

நீங்கள் கணினி அதிகம் பார்ப்பவரா? கண்ணில் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இதை செய்தாலே போதும் | Kan Pathippai Kuraikkum Valikal
 By Sahana 3 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தினமும் கணினி பார்ப்பவர்கள் மட்டுமல்ல நம்பில் பலருக்கு கண் பராமரிப்பை பற்றி தெரியாமலே இருக்கின்றது அவ்வாறு கண் பார்வையை பாதுகாக்க தினசரி செயல்பாடுகளின் போதும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில எளிய குறிப்புகள் என்ன என்பது பற்றி நாம் இங்கு பார்ப்போம்.

நீங்கள் கணினி அதிகம் பார்ப்பவரா? கண்ணில் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இதை செய்தாலே போதும் | Kan Pathippai Kuraikkum Valikal

போதுமான அளவு தூக்கம் 

போதுமான அளவு தூக்கம் கண்ணுக்கு மிக அவசியமான ஒன்றாகும். தினமும் 7 - 8 மணித்தியாலங்கள் தூங்க வேண்டும் என்பது கட்டாய தேவை. நீங்கள் விழித்திருக்கும் வரையில், உங்கள் கண்களும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பதால், உங்கள் கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுப்பது அவசியமாகிறது. போதுமான தூக்கம் இல்லாமை, கண் சோர்வுக்கு வழிவகுக்கும். சோர்வான கண்களுக்கான அறிகுறிகள், கண் எரிச்சல், கவனம் செலுத்துவதில் சிரமம், கண்களில் வறட்சி அல்லது அதிகப்படியான கண்ணீர் வடிதல், மங்கலான பார்வை, ஒளி உணர்திறன் மற்றும் அதிகபட்சமாக கழுத்து மற்றும் தோள்களில் வலி ஆகியவை ஆகும்

நீங்கள் கணினி அதிகம் பார்ப்பவரா? கண்ணில் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இதை செய்தாலே போதும் | Kan Pathippai Kuraikkum Valikal

கூலிங் கிளாஸ்கள்​ பயன்படுத்தல்

நீங்கள் வெயிலில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் UV பாதுகாப்பு சன்கிளாஸ்களைப் பயன்படுத்த மறக்க கூடாது. அதே நேரம் நீங்கள் பயன்படுத்தும் சன்கிளாஸின் லென்ஸ்கள் 99% முதல் 100% UVA மற்றும் UVB கதிர்களைத் தடுக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

நீங்கள் கணினி அதிகம் பார்ப்பவரா? கண்ணில் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இதை செய்தாலே போதும் | Kan Pathippai Kuraikkum Valikal

கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்க கூடாது

கண்களை கைகளை கொண்டு அழுந்த தேய்க்க கூடாது. அதனால், உங்கள் கைகளில் இருக்கக்கூடிய அழுக்கு, பாக்டீரியா போன்றவை கண்களில் சென்று தொற்று உண்டு செய்யலாம். மேலும் கண்பார்வை குறைபாட்டுக்கு காண்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், கைகளால் அழுந்த தேய்க்கும் போது அது கிழியவும் வாய்ப்புள்ளது.

நீங்கள் கணினி அதிகம் பார்ப்பவரா? கண்ணில் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இதை செய்தாலே போதும் | Kan Pathippai Kuraikkum Valikal

வெளியே சென்றுவிட்டு வந்ததும் முகம், கைகால்களை சுத்தம் செய்யவேண்டும். உங்கள் முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, தூசி துகள் ஏதேனும் இருப்பின், அவை உங்கள் கண்களில் படுவதற்கு முன்னர் கழுவி விட வேண்டும். இதன் மூலம் உங்கள் கண்களை பாதுகாக்கலாம்.

நீங்கள் கணினி அதிகம் பார்ப்பவரா? கண்ணில் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இதை செய்தாலே போதும் | Kan Pathippai Kuraikkum Valikal

 நீரேற்றம் மற்றும் உணவு முறை

உடலில் நீரிழப்பு இருக்கும் போது உடல் வறட்சி ஏற்பட்டு அது கண்களை சுற்றி கருவளையம் ஏற்படக்கூடும்.குறிப்பாக ஒமேகா- 3 நிரம்பிய மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால், கண்களை பாதிக்கும் மாகுலர் சிதைவை தடுக்கலாம்.

நீங்கள் கணினி அதிகம் பார்ப்பவரா? கண்ணில் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இதை செய்தாலே போதும் | Kan Pathippai Kuraikkum Valikal

​கண்களின் பாதிப்பை தடுத்து கணினி பார்க்கும் சரியான முறை​

கம்ப்யூட்டர் மானிட்டர்கள் மற்றும் லேப்டாப் திரைகள் உங்கள் கண்களில் இருந்து ஒரு கை தூரத்தில் வைக்கப்பட வேண்டும் மற்றும் கண் மட்டத்திலிருந்து 20 டிகிரி கீழே இருக்க வேண்டும். கணினியில் நீங்கள் பணிபுரியும் போது, ​​உங்கள் அறையில் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்யவும். விளக்கு வெளிச்சத்தில் பணிபுரிவதாக இருந்தால், அதிக பிரகாசமான விளக்குகள் உங்கள் கண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் கணினி அதிகம் பார்ப்பவரா? கண்ணில் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இதை செய்தாலே போதும் | Kan Pathippai Kuraikkum Valikal

​கண்களின் பாதிப்பை தடுக்கும்  விதிமுறை​

அதிக திரைநேரம் இருப்பதாக தோன்றும்போது தவறாமல், 20-20-20 விதியைப் பின்பற்றவும். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், உங்கள் கணினியிலிருந்து பார்வையை விலக்கி, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளின் மீது 20 வினாடிகள் பார்வையை நிலைநிறுத்தவும். வறட்சியைத் தடுக்க அடிக்கடி கண் சிமிட்டவும். அதேபோல ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் எழுந்து சில அடிகள் நடக்க வேண்டும். திரையில் இருந்து விலகிச் செல்வது உங்கள் கண்களுக்கு ஓய்வு தருவதோடு, உங்கள் உடலின் தோரணையையும் மேம்படுத்துகிறது.

நீங்கள் கணினி அதிகம் பார்ப்பவரா? கண்ணில் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இதை செய்தாலே போதும் | Kan Pathippai Kuraikkum Valikal

கண் பரிசோதனை

உங்கள் கண்களை குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் பரிசோதிக்க வேணும். சில சமயங்களில் கண் கோளாறுகள், அறிகுறிகள் இன்றி உருவாக கூடும் என்பதால், உங்கள் பார்வையைப் பாதுகாக்க, வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம். அதே போன்று கண்ணாடி அணிபவராக இருந்தாலும் லென்ஸ் அணிந்தாலும் கண்களின் பவர்-ஐ அவ்வப்போது பரிசோதித்து கொள்வதும் கண் பார்வை குறைபாடு தீவிரத்தை தடுக்க உதவும்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?