கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்பு: விசாரணைகள் தீவிரம்
![கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்பு: விசாரணைகள் தீவிரம் | Journalist Was Found Dead In Colombo கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்பு: விசாரணைகள் தீவிரம் | Journalist Was Found Dead In Colombo](https://cdn.ibcstack.com/article/f58d4585-9c05-47a9-9bd9-2ba397dbc8e9/24-6660b02948ff2.webp)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலமானது இன்று (5) மோதரை கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் இந்துனில் ஜயவர்தன என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல்நிலையத்தில் முறைப்பாடு
குறித்த நபர் இரண்டு நாட்களாக தனது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து உறவினர்கள் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட விசாரணை
மேலும், இவரின் மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை அறிய காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துனில் ஜயவர்தன இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் வெளி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் அவர் இதற்கு முன்னர் லக்பிம பத்திரிகை மற்றும் ஸ்வர்ணவாஹினி போன்ற ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்