யாழில் நடுவீதியில் பெண்ணுக்கு நடந்த கொடூரம் ; பெண்ணை தீ மூட்டி கொளுத்திய நபர் கைது
![யாழில் நடுவீதியில் பெண்ணுக்கு நடந்த கொடூரம் ; பெண்ணை தீ மூட்டி கொளுத்திய நபர் கைது | Arrested The Person Who Set Fire Jaffna Penna யாழில் நடுவீதியில் பெண்ணுக்கு நடந்த கொடூரம் ; பெண்ணை தீ மூட்டி கொளுத்திய நபர் கைது | Arrested The Person Who Set Fire Jaffna Penna](https://cdn.ibcstack.com/article/b2795107-ff35-4682-838a-de815d580878/24-665b49c485d68.webp)
By Sahana
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை தீ மூட்டி கொளுத்தியதால் பதட்ட நிலை ஏற்பட்டது.
சாவகச்சேரியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே மேற்படி நபரால் எரியூட்டப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு யாழ் குருநகர் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கருத்துகள்