யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!
18th October 2020 இலங்கைச் செய்திகள்
யாழ்ப்பாணம்- புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 62 வயது மதிக்கத்தக்க முதியவரே படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் குறித்த முதியவரின் வீட்டுக்கு சென்ற மர்மக் கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்