கனம் தலைவர் அவர்களுக்கு,
குமரப்பா ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலுக்கு மேலாக வைத்துக் கைது செய்யப்பட்டேன். பின்பு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு இந்திய அமைதிப் படையினரின் கண்காணிப்பிலும், இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிலும் இருக்கிறேன். மேலும் என்னை கொழும்பிற்குக் கொண்டு செல்ல நேரிடலாம். நான் இலங்கை அரசாங்கத்தின் சட்டங்களை அங்கீகரிக்கவில்லை. என்னைக் கொழும்பு கொண்டு செல்ல நேரும் பட்சத்தில் என்னை முழுமையாக அழித்துக் கொள்ள சித்தமாயுள்ளேன்.
”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”
இங்ஙனம்
குமரப்பா
(ஒப்பம்)
05.09.1987 அன்றே ஒருவரை ஒருவர் நேசித்து வந்த குமரப்பா-ரஜனி இணையரின் திருமணம் நடந்தேறியிருந்தது. பலாலி முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தளபதி குமரப்பா அவர்கள் தலைவருக்கு எழுதிய இக்கடிதம் தாய்மண்ணின் விடுதலைக்கு முன்பு தமக்கு எதுவுமே ஒரு பொருட்டில்லை என்பதையே தெளிவாக எடுத்தியம்பியது. அவ்வண்ணமே 05.10.1987 அன்று எம்மண்ணின் விடியலுக்காய் பதினொரு வேங்கைகளுடன் தம்மையும் ஆகுதியாக்கிக்கொண்டார் லெப் கேணல் குமரப்பா.
அக்டோபர் 5, யாழ் மாவாட்ட சிறப்புத்தளபதி லெப் கேணல் குமரப்பா அவர்களின் வீரவண நிகழ்வு ஆகும்
..
நன்றி மீழ் பிரசூரம்.
கருத்துகள்