முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 88

 பெருமை சேர்த்தனள் பெண்ணினத் திற்கே!

மன்னார் ஆட்காட்டி வெளிதனிற் பிறந்து

மாலதி யென்னும் பெயர்’தனைத் தாங்கித்

தன்னிக ரில்லாத் தமிழிச்சி தானெனத்

தனையே ஈந்தாள்! தமிழீழத் தாயவள்

இன்னல் களைந்திட எடுத்தடி வைத்தாள்!

ஈடிலா மகளிர் அமைப்பினில் இணைந்து

பன்னுதற் கரியபல தாக்குதல் புரிந்தே

பெருமை சேர்த்தனள் பெண்ணினத் திற்கே!


குறும்புத் தனங்கள் குறைவின்றி ஆற்றும்

கொஞ்சும் கிளியாய்க் குலவி நின்றவள்

நிறுவிடத் துடித்தனள் தமிழீழம் தனையே

நெஞ்சினில் நெருப்பினை ஏந்தி நின்றனள்!

இறக்கும் போதிலும் ஆயுதங்கள் தம்மை

இன்னுயிர் அமைப்பிடம் கொடுத்து மறைந்தனள்!

மறக்க வியலா முதற்பெண் புலியாய்

மாவீரர் பெயர்களில் மாண்புற இணைந்தவள்!


அண்ணன் தன்னிடம் ஐயமறக் கற்ற

ஆயுதப் பயிற்சியில் உயரத் திளைத்து

எண்பத் தேழில் ஐப்பசித் திங்கள்

இந்திய இராணுவம் முற்றுகை யிடவே

கண்ணெனத் துமுக்கியைக் கைதனில் ஏந்திக்

களத்தினில் இறங்கிக் கயவர் தம்மைப்

பெண்ணெனும் தெய்வம் புலியாய்ப் பாய்ந்து

பெரிதாய் வீழ்த்தினள் பெரும்படை தனையே!


தமிழீழத் தேசிய விடுதலைப்போ ராட்டத்தின்

தக்கவே முதுகெலும் பெனவே விளங்கும்

அமிழ்தெனத் திகழும் ஆன்றநல் அரிவையர்

அவர்தம் தியாகமும் வீரமும் ஒருங்கே

இமயமென நாமடைந்த வெற்றிக்கு என்றும்

உறுதுணையாய் நின்றதை உலகே அறியும்!

சமயத்திற் தன்னுயிர் போக்கியே சகாயசீலி

தமிழ்ப்பெண் போர்ப்பணி தொடர வைத்தனள்!


அடுப்பங் கரைதனில் அகப்பை பிடித்தே

உறங்கிய பெண்தனை உசுப்பி அழைத்து

எடுப்பாய் நிமிர்ந்து ஆயுதம் ஏந்தியே

ஆணுக்கு நிகராய் அவனியிற் றிகழத்

துடிப்புடன் அமைப்பினைத் தொடக்கிய தலைவன்

தூய நெஞ்சினைப் போற்றுதல் முறையே!

அடிப்படை உரிமைகள் மறுத்தோரை எதிர்த்து

அணங்குகள் படையின்று விரட்டுதல் காணீர்!


‘தாயாய்த் தங்கையாய் தாரமாய் தாதியாய்

தரணியிற் சேவைகள் செய்திடப் பிறந்தவள்’

வாயாரப் பேசிய வரட்டு வார்த்தைகளை

வர்ணங்கள் பேசியோர் வஞ்சனைக் குரல்களைத்

தீயார இட்டுமே தீய்ந்திடச் செய்தார்!

தேன்தமிழ்ப் பெண்கள் சிறுமையை எதிர்த்தார்’!

ஓயாத அலைகளில் அவர்தம் ஆற்றலை

உலகம் வியந்தது! எதிரியும் திகைத்தான்.!


பட்டுச் சேலைகள் பலவகை நகைகள்

பகட்டு வாழ்வுகள் பயனற்ற வையெனக்

கட்டுப் பாடுடை வாழ்வுதனைக் கடைப்பிடித்து

‘காண்போம் தமிழீழம்’ என்கின்ற கொள்கையில்

கட்டான மனிதகுல வாழ்வின் விடிவிற்காய்க்

கன்னியராய்த் தனிமனித வாழ்வினை அர்ப்பணித்துச்

சிட்டெனும் சொல்தவிர்’த்துச் சிறுத்தையாய்ச் செயற்படும்

செந்தமிழ்ப் பெண்களின் சிறப்பினைச் செப்பிடுவோம்!


அடிமட்டத் திலிருந்து எழுப்பிய அமைப்பின்று

ஆணித் தரமாய் அகலப் பரந்து

கொடியெனெப் படர்ந்து உயர்’ அரசியலில்

குற்றமில் நீதித் துறையில் நிர்வாகத்தில்

இடியென முழங்கும் ஊடகத் துறையில்

இரக்கம் மிகுநல் மருத்துவப் பிரிவில்

குடிகளின் நலந்தனைக் கருத்திற் கொண்டுமே

கண்ணுறக்க மின்றிக் கடமை செய்கிறதே!


இத்தகை வளர்ச்சிக்கு ஈடிலா வித்திட்டு

இறப்பெனும் முடிவினை வாழ்வினில் ஏற்றுப்

பத்தரை மாற்றுத் தங்கமெனத் திகழ்ந்து

பவ்வியமாய் விடுதலைக்கு உரம்தனைக் கொடுத்து

மொத்தத் தமிழினத்தின் மனத்திலும் நிறைந்து

முதலாம் மாவீரப் பெண்ணென அறிந்து

நித்தமும் நெஞ்சினில் நிறை தாமரையாய்

நிறுத்தியே வணங்குவோம் நாளும் வாழ்வில்!


கவியாக்கம்:- கனடாவிலிருந்து பவித்திரா.


மீழ் பிரசூரம் செய்யப்பட்டது


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?