முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 92

 தமிழீழத் தேசிய மாவீரர் நாள்…!

மாவீரர் என்றால யாரென்று ஒவ்வொரு ஈழத்தமிழ் ஆண், பெண், சிறுவர், சிறுமிக்கும் தெரிந்த விடயம். தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். இவர்கள் வீரத்தின் இலக்கணமாக திகழ்கின்றனர். எதிரியை அழித்தவர்கள்.


அஞ்சாது எதிரியின் பாசறைமேல் படையெடுத்து வெற்றி கண்டவர்கள். உலகவரலாற்றில் எமது மாவீரர்களுக்கு நிகரானவர்கள் வேறு யாருமில்லை. ஆணும் பெண்ணுமாகப் பால் வேறுபாடின்றிப் போரிட்டுச் சாதனை படைத்த மாவீரர்களைத் தமிழீழம் தவிர்ந்த பிறநாட்டில் காண்பது அரிது. கொடியது அகல, விடுதலை கிடைத்திட உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்த மாவீரர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.


தமிழீழ மண்ணெங்கும் நினைவுச்சின்னங்களாய், சிலைகளாய், துயிலுமில்லமாக மாவீரர்கள் குடிக்கொண்டுள்ளனர். அவர்கள் ஈழமண்ணின் விதையாகவும், ஒளிமயமான சுடர் ஒளியாகவும், எம் இனத்தின் பாதுகாப்பு அரணாகவும் இடம் பெறுகின்றனர். எமது தேசமெங்கும் சர்வவியாபியாகி மாவீரர் நிற்கின்றனர். புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமான மாவீரர்கள் வானளாவிக் கால, நேர, இடம், தூர எல்லைகளைக் கடந்து எமது உணர்வோடும் கனவோடும் கலந்துவிட்டனர்.


மாவீரர்நாள் தமிழீழத்தின் தேசியநாள் என்பதை யாவரும் அறிவர். அன்று நாம் துயிலும்மில்லம் சென்று மாவீரர் கல்லறைகளுக்கு விளக்கேற்றுகின்றோம். மனித உடல் கிடக்கும் கல்லறை தெய்வத்தின் இருப்பிடமாகப் பண்டுதொட்டு நம்பப்படுகிறது. பெரும்பாலான வணக்கத்தலங்கள் கல்லறைகலாகவே ஆரம்பித்தன. நாளடைவில் அவை கோயில்களாக மாறிவிட்டன. மக்கள் காட்டும் மதிப்பும், மரியாதையும் அவர்கள் கல்லைரையில் உரைவோர் மீது இயல்பாக கொண்டுள்ள பாசமும், பரிவும் கோயிலாக கல்லறைகள் மாறுவதற்குக் காரணமாகின்றன.


இப்போது மாவீரர் நாளானது மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழத்திலும், ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் மிகவும் உணர்வுபூர்வமாகக் கடைபிடிக்கப்படுகிறது. தமிழீழத்தின் வட, கிழக்கு மண்பரப்பில் இருபத்தைந்து மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 12,635 கல்லறைகளும் 7,365 நினைக்கற்களும் காணப்படுகின்றன. கூட்டுத்தொகை 20,000 இது எப்படி என்றால் வித்துடல் ஒரு இடத்திலும் அதே வித்துடளுக்குரிய நினைவுக்கல் இன்னோர் இடத்திலும் இருப்பதால்தான். உதாரணத்திற்கு தென்தமிழீழ மாவீரருடைய வித்துடல் கோப்பாய் துயிலுமில்லத்திலும், அவருடைய நினைவுக்கல் அவர் பிறந்த மண் தரவை மட்டக்களப்பிலும் இருக்கும். இதன் காரணமாக கூட்டெண் 20,000 ஆக உயர்ந்துள்ளது. மட்டக்களப்பு மாவீரர் பலருடைய வித்துடல்கள் விசுவமடு, கோப்பாய் போன்ற துயிலுமில்லங்களிலும் விதைக்கப்படடுள்ளன. அவர்களுடைய நினைவுக்கற்கள் தென் தமிழீழத்தின் மாவீரர் துயிலுமில்லங்களிலும் நாட்டப்பட்டுள்ளன. பெரும்பாலும் மாவீரர் குடும்பத்தினரின் விருப்பப்படியே இப்படிச் செய்யப்படுகிறது. இரு துயிலுமில்லங்களிலும் அவர்களுக்கான தீபங்கள் ஏற்றப்படுகின்றன.


மாவீரர் நாள் பாடலின் நான்கு வரிகளை இங்கு தருகின்றோம்.


“உயிர்விடும்போது வேளையில் உங்களின் வாயது

உரைத்தது தமிழீழம் – அதை

நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்

நிச்சயம் எடுத்தாள்வோம்”


2005 துயிலும்மில்ல விபரத்தின் அடிப்படையில் 2005ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.




“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?