முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 668 புலம்பெயர் தமிமீழ உறவுகளிற்கு அன்பான வேண்டுகோல்,

தாயகத்தில் வாழும்எப்படியான சொந்த உறவுகளிற்கும் 5லக்ஸ்சத்திற்கு மேல் பணங்களைக்கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் அதனால் உங்களிற்கும் மனக்கவலை அவர்களின் உயிருக்கும் பாதகம் ஏற்பட்டுவிடும், ஏமாற்றம் தாங்கமுடியாமல் தனக்கு தானே தீ மூட்டிய நபர் - யாழில் பெரும் துயரம்! காணி வாங்குவதாக கூறி மகன் அனுப்பிய பணத்தை பெண் ஒருவரிடம் கடனாக கொடுத்து ஏமாந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் காணி வாங்குவதற்காக தனது தந்தைக்கு பணம் அனுப்பியுள்ளார். தனக்கு தானே தீமூட்டி jaffna hospital அப்பணத்தில் ஒரு கோடி ரூபாயை குறித்த நபர் பெண் ஒருவருக்கு கடனாக வழங்கியுள்ளார். ஆனால் அந்த பெண் பணத்தை வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் இரண்டு முறை அதிக மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன் பிறகு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். மூன்றாவது முறையாக கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவேளை மீனவர்களின் உதவியில் காப்பாற்றப்பட்டுள்ளார்

d 667 வீரமரவனை தொடர்ந்து நினைவு கூரும் ஈழத் தமிழர்கள்,

யாழில் சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறப்பு! யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் கோவில் முன்பாகவுள்ள சங்கிலியன் மன்ற அரங்கில் சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டதோடு 78வது ஆண்டு நிறைவு நிகழ்வும் இன்று (19) மாலை இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வானது முத்திரை சந்தியிலுள்ள சங்கிலியன் உருவச்சிலை முன்றலிருந்து சங்கிலிய மன்னனின் உருவப்படம் பருத்தித்துறை பிரதான வீதி வழியாக மங்கல வாத்திய கலாச்சார நிகழ்வுகளுடன் பவனியாக சங்கிலியன் மன்றத்தை சென்றடைந்து அங்கு வைக்கப்பட்டதோடு புதிதாக அமைக்கப்பட்ட சங்கிலிய மன்னனின் உருவச்சிலையும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. யாழில் சங்கிலிய மன்னனின் உருவச்சிலை திறப்பு! | Opening Of The Idol Of Sangiya King In Yali இந்நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

d 666 புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் அவதானமாக இருக்கவும்

வட்டி வரும் என நினைத்து இலங்கையில் பெரும் தொகைப்பணத்தை ஒருபோதும் வைப்பில் இட வேண்டாம்? சாட்டுப் போக்குச் சொல்லி பணத்தை பறிப்பதில் சிங்கள வெறியர்கள் மிகக் கெட்டிக்கார்கள் தமிழர் என்றால் புலியின் பணம் சிங்களவர் என்றால் போதை கடத்தல் பணத்தின்கதை முடிந்து விட்டது, இதே நிலை போன வருடம் இலங்கை முஸ்ஸிலிம் சகோதரர் நானா என்பவர் அவுஸ்த்திரேலியாவில் இருந்து இலங்கைக்குப் பண மாற்றம் செய்பவர் அமரிக்கா டொலர் கூடிக்கொண்டுபோனமையால் ஐம்பது லக்ஸ்சம் பணம் இலங்கை வங்கியில் வைப்பில் இட்டு வைத்து இருந்தார், அவருக்கும் இதே கதைதான் சொல்லட்பட்டது, அவர் தான் அவுஸ்திரேலியாவில் உழைத்தபணம் என உரிய ஆவணம் காட்டியமையால் 25 லக்ஸ்சம் கொடுக்கப்பட்டது, பின்னர் இலங்கை பொருளாதார ரீதியில் வழர்ந்தபின் தரலாம் என போலிக் காரணம் சொல்லப்பட்டது,மில்லியன் கணக்கான தொகையை வங்கியில் வைப்புச் செய்த பெண் கைது பெண்ணொருவர் இரண்டு வங்கிகளில் 20.4 மில்லியன் தொகையை வைப்பு செய்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய பெண், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொ

d 665 தமிழீழப்பகுதியில் சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு?

யாழில் கொடூரம் - சிறுமிக்கு மதுபானம் பருக்கப்பட்டு கூட்டு வன்புணர்வு பதின்ம வயது சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்து அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு அச்சுவேலி காவல்றையினர், சிறுமியின் தாயாருக்கு கூறி அனுப்பியுள்ளனர். அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு யாழில் கொடூரம் - சிறுமிக்கு மதுபானம் பருக்கப்பட்டு கூட்டு வன்புணர்வு | Jaffna Girl Forced To Drink Liquor And Gang Raped அச்சுவேலி தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மதுபானம் பருக்கப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டை பதிவு செய்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பிக்குமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவனை யாழில் கொடூரம் - சிறுமிக்கு மதுபானம் பருக்கப்பட்டு கூட்டு வன்புணர்வு | Jaffna Girl Forced To Drink L

d 664 அடிக்கடி ஏப்பம் வருதா? கட்டாயம் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

அடிக்கடி ஏப்பம் வருதா? கட்டாயம் காரணத்தை தெரிஞ்சிக்கோங்க நாம் ஒவ்வொரு தடவை சாப்பிடும் பொழுதும் உணவுடன் சேர்த்து சிறிதளவு காற்றையும் விழுங்குகின்றோம். அதை இரைப்பை வெளியேற்றும் செயற்பாடே ஏப்பம் ஆகும். ஏப்பம் வருவது இயல்புதான். ஆனால், அடிக்கடி வரும் ஏப்பம், நமக்கும் எரிச்சலைக் கொடுக்கும். பிறருக்கும் முகச் சுளிப்பை ஏற்படுத்தும். அவசர அவசரமாக உணவு உண்ணுதல், தண்ணீர் குடித்தல் போன்ற காரணங்களுக்காகவும் குளிர்பானங்கள் பருகும்போதும் இரைப்பையில் உருவாகும் ஒருவித அமிலத்தன்மை அதிகமாகி அது நெஞ்செரிச்சலுடனான புளிப்பான ஏப்பமாக உண்டாகும். தொடர் ஏப்பம் frequent belching ஏப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுகள் சிறிதளவு பெருங்காயத்தை சூடான நீரில் கலந்து உணவு உண்பதற்கு முன்பு குடித்தால் ஏப்பம் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். வெள்ளைப் பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது வாயுத் தொடர்பான கோளாறுகளை நீக்கிவிடும். ஏலக்காய் டீ குடிப்பது செரிமானத்தை துரிதப்படுத்தும். கொதிக்கும் நீரில் புதினா இலைகளைப் போட்டு நன்றாக கொதிக்க வைத்ததன் பின்னர் நாட்டுச் சர்க்கரை கலந்து குடிக்கலாம். சீரகம், சோ

d 663 கொலையின் உன்மை வெளிவந்தது,

இளம் பெண்ணின் மரணத்தில் புதிய திருப்பம்! வெளியாகிய அதிர்ச்சி தகவல் கண்டி- அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 10ம் திகதி இரவு 9.30 மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில், அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொலையைச் செய்தாரா என்பதை உறுதிப்படுத்த அவரது DNA மாதிரிகள் மற்றும் இறந்த பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டை மறுத்த இராணுவ சிப்பாய் இளம் பெண்ணின் மரணத்தில் புதிய திருப்பம்! வெளியாகிய அதிர்ச்சி தகவல் | Alawatugoda Young Women Dead Police Investigation காவல்துறை மோப்ப நாய் ´ஏகல்´ மூலம் அவரது வீடு அடையாளம் காணப்பட்டதை அடுத்து சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார். இராணுவ சிப்

d 662 இலங்கையில் ஆயுத வன்முறை அதிகரிப்பு

இலங்கை செல்வதை தவிர்க்கவும் உங்களிற்கும் இந்த நிலைவரலாம் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு! கொட்டாஞ்சேனை – பரமானந்தா மாவத்தையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி திருத்துபவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு! | Shooting In Kotanjenai இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேலும் துப்பாக் கிச்சூடு நடந்ததற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.