முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 179

 வைரலாகுது மாஸ்டர் விஜய் டி ஷர்ட் போட்டு மஜாவாக போஸ் கொடுக்கும் யாஷிகாவின் போட்டோ நம் தமிழகத்தை பொறுத்தவரை நடிகை என்பதனை விட இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டி என பெயர் எடுத்தவர் யாஷிகா ஆனந்த். துருவங்கள் 16 வாயிலாக அறிமுகமானாலும், பிக் பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று தந்தது. ஒரு சில படங்களில் ஹீரோயின், கெஸ்ட் ரோல், பாடலுக்கு நடனம் என கோலிவுட்டில் தனக்கென்ன நிரந்தர இடத்தை தேடிவருகிறார் யாஷிகா.   தற்பொழுது ட்ரெண்டுக்கு ஏற்றது போல போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இன்று கோலிவுட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை மாஸ்டர் தான். ஏப்ரலில் ரிலீஸ் ஆகவேண்டிய படம், எனினும் சுமார் 10 மாதங்களாக முடிந்த படத்தை கையில் வைத்துக்கொண்டு திரை அரங்கில் ரிலீஸ் செய்துள்ளனர். போக்கிரி பொங்கலை போல பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகி மாஸ்டர் பொங்கல் என ஹிட் அடித்துள்ளது. மாஸ்டர் என இவர் பதிவிட்ட இந்த போட்டோ லைக்ஸ் குவித்து வருகின்றது.

TAMIL Eelam news 178

 “தமிழீழ போராட்டத்தில் முதல் பெண் தளபதி” மேஜர் சோதியா ★பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது. அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற… தலைக்கிரீடம் ஒருபுறம்.. உறுதியாக… உறுதியாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன. இந்திய படைக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம். நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர். சோதியாக்கா வயித்துக்குத்து… சோதியக்கா கால்நோ… சோதியாக்கா காய்ச்சல்… சோதியாக்கா…. சோதியாக்கா. ஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த

TAMIL Eelam news 177

 நினைவுத்தூபி விவகாரம் ஐநா அமர்வில் நடவடி எடுக்கக்கூடியவாறு அழுத்தம் கொடுக்கவேண்டும் என சியோபென் தெரிவித்துள்ளார். பிரித்தானியா தொழில் கட்சி பாராளுமன்ற அங்கத்தவர் சியோ பெண் அம்மையார் இலங்கை தொடர்பில் பிரித்தானியா பாராளுமன்றில் தனது கருத்தை முன்வைத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில். பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கக்படகூடியவகையில் மனிதத்துவத்துக்கும் எதிரான குற்றங்களை இழைத்தமைக்காக குற்றம் சுமத்துப்பட்டுள்ள நிலையிலும் பிரதராகவும் ஜனாதிபதியாகவும் பதவியில் இருக்கிறார்கள். அவர்கள் தமது சகாக்களை குறிப்பாக யுத்தக் கற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களையும் உயர்பதவிகளில் ஏற்றிவைத்திருக்கின்றார்கள். இறுதியாகக் கடந்த வாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாக்கால் இனப்படுகொலை நினைவுத்தூபி பலவந்தமாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கொடூர செயல் எனவும்- சிறிலங்காவுக்கு எதிராக எதிர்வரும் ஐநா மனித உரிமை பேரவை அமர்வில் நடபடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

TAMIL Eelam news176

 முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு! ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சிங்களப் பேரினவாத அரசினால் இடித்து அழிக்கப்பட்டதைக் கண்டித்து ஐ.நா (ஐக்கிய நாடுகள் அவை) முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.  இப் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சுவிஸ் தமிழர் இளையோர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனவழிப்பு சிங்கள பேரினவாத அரசு இடித்துடைத்ததை கண்டித்து மாணவ சமூகம், மக்கள் அதிரடியாக போராட்டத்தில் குதித்தனர். நொடிப்பொழுதில் தாயக உறவுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் இளையோர்கள் சமூக வலைத்தளங்களில் தாயக நிலைமையை வெளிக்கொண்டுவந்தார்கள். அந்தவகையில் இன்று ஐ.நா (ஐக்கிய நாடுகள் அவை) தமிழ் மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதாதைகளை தாங்கிய வண்ணம் சிங்கள பேரினவாத அரசை கண்டிக்கும் முகமாக நிகழ்வில் கலந்துகொண்ட மக்களால் கோசங்கள் எழுப்பப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தமது முழுமையான ஆதரவை

TAMIL Eelam news 175

ஒவ்வொரு தமிழனும் புலிதான்டா ஒவ்வொரு தமிழனும் புலிதான்டா… இத”நாங்க சொல்லவில்லை சிங்கள தேசமே எம் நெஞ்சில் பச்சை குத்தி கூறுகின்றது . இது புரியாமல் இன்னமும் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கின்றாயே தமிழா ! அடுத்தவன் உயிரைக்குடுத்து கிடைக்கும் ஈழத்தில் வாழ்வது என்ன”அவ்வளவு சுகமா! அடேய் தம்பியாக்களே தங்கைமாரே பெரியவரே !!!! நாம் ஒதுங்கி போனாதும் இந்த சிங்கள தேசம் வரும் பாருங்கோ வம்புக்கு அப்போது என்ன செய்வாய் தமிழா! ம் முள்ளிவாக்காலிலே ஒன்னும் செய்யமுடியாமல் போனது தான இனி என்ன செய்வது”என்று சிந்திக்காமல்” இழந்ததிற்கு லாபத்தை தேடு அது உனது லாபம் அல்ல ஒத்துமொத்த தமிழர் கட்டிய கனவு ஆசை இது நேற்றேய கனவல்ல ஆண்டான்டு காலமாக பல உயிர்கள் விதைக்கப்பட்டு கேக்கப்பட்டு இன்னமும் எமக்கு கிடைக்காத இந்த ஆசை ஈழத்தாயை மீட்டு எமது இளம் சந்ததிக்கு கொடுத்துவிடுவோம் அது உனது பிள்ளை எனது பிள்ளையோ மற்றவன் பிள்ளையோ சந்தோசமாக ஆட்சி செய்யட்டும் இந்த சிங்கள நாய்களில் கால்களில்”நக்கி எத்தனை நாற்களுக்கு கிடக்குறது. வெளில வாங்க வந்து பாருங்கோ இங்கே என்ன நடக்குது என்று எவனுக்கும் பயப்பிடாதயுங்கோ அப்படி”பயந்திருந்தால் இன்று எம

TAMIL Eelam news 174

யாழ் நினைவு தூபி விடையம் பல வெளிநாட்டு தூதுவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது எப்படி ? யாழ் பல்கலைக் கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிப்பு விடையம், கொழும்புல் உள்ள பல வெளிநாட்டு தூதுவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கை தீவே கொரோனா கொடூரத்தில் ஆட்டம் கண்டுள்ள நிலையில். போதாக் குறைக்கு மழை வெள்ளம் என்று அல்லாடி வரும் நிலையில். ஏன் முள்ளிவாய்க்கால் தூபியை இடிக்க வேண்டும் என்பது,  முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்க தூதரகம், இந்திய (யாழ்) தூதரகம், இங்கிலாந்து என்று பல தூதரகங்கள் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோட்டபாயவின் செல்வாக்கு தென்னிலங்கையில் வெகுவாக சரிந்து வருகிறது. பால் தொடக்கம் பாணின் விலை சொல்ல முடியாத அளவு அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கான எந்த ஒரு சரியான நடவடிக்கையையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை. சிங்களவர்கள் பெரும் அதிருப்த்தியில் உள்ளார்கள். ஏன் கோட்டாவுக்கு வாக்கு போட்டோம் என்ற நிலையில் அவர்கள் இருக்கும் போது. எதில் கை வைத்தால் தமிழர்கள் பொங்கி எழுவார்களோ. அதிலும் குறிப்பாக மாணவர்கள் பொங்கி எழுவார்களோ அதில் கோட்டா கை வைத்தார். அது தான் நினை

TAMIL Eelam news 173

 கரும்புலி மேஜர் அன்பரசன்  (06.07.1980 — 08.01.2007) ★இவர் 1980 ஆம் ஆண்டு யூலை மாதம் 6 ஆம் தேதி யாழ்மாவட்டம் வல்வெட்டிதுறையில் பிறந்தார். 1994 ஆம் ஆண்டு அதாவது சரியாக தனது பதினான்காம் அகவையில் தனது அன்னையின் கரங்களால் தமிழன்னையிடம் மண் காக்க தேசியத் தலைவரின் கைகளில் கையளிக்கப்பட்டு, இயக்கத்தால் இளந்திரையன் என்று பெயர் சூட்டப்பட்டு இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளபட்டார். பின்னாளில் இவரது உழைப்புக்கும் அன்புக்கும் நெகிழ்ந்த முக்கிய தளபதி ஒருவரால் அன்பரசன் என்றழைக்கப்பட்டார். தாய்மண்ணின் விடுதலைக்காகவே அன்றுமுதல் இயங்க ஆரம்பித்தார். இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் ஆரம்ப காலகட்டங்களில் சிறுத்தைப் படையணியில் செயல்பட்டார் இவர். சிறப்பான பயிற்சிகளின் மூலம் தன்னை ஒரு சிறந்த போராளியாக உருவாக்கிக் கொண்டார். ■ முதலாவது தாக்குதல் முதலாவது தாக்குதல் 1996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்” வெற்றித் தாக்குதல் நடவடிக்கையின் போது முல்லைத்தீவு, அளம்பில் பகுதியில் இலங்கை இராணுவத்தின் தரையிறக்கத் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த சிறுத்தைப் படையணியில் இவரும் ஒருவர். இந்தத் தாக்குதலின் போது வலது கையில் பலமான காயமட