முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 125

 கல்லறை கண்டு நிமிர்வோம்



முதல்நாள் இரவு கண்தூங்கும் பொது

அம்மா சொன்னாள்

நாளை விடிகாலையில் எழும்போது

மாவீரர் ஈகைச்சுடரில் விழித்தெழும்படா மகனே என்று

அவர் சாவை மிதித்திட

நஞ்சுமாலை நெக்ஞ்சிலடா

வாழ்வை மதித்தவர்

வானம் பிளந்திட கானம் இசைத்திட

வையகம் நடந்தவர்

தாய் நிலம் காப்பதற்காய்

தம்முயிரை ஈகையாக்கி

தளராத துணிவுடன் நடந்துவாடா!

தாயை மிதித்தவன்

தளம்தேடி நடந்தவர்

இனியசாவு

எப்படி நடந்ததென

உனக்குத் தெரியுமாடா?

அப்பா எங்கே

அண்ணா எங்கே

அக்கா எங்கே

தங்கை எங்கே…..

எதிரிகளம் புகுந்து

உயிர்கொடுத்த உத்தமரது

பொன்னடி தொழுது ஏழு

விடிவு பிறக்குமடா !

காடும் மலைகளும்

எனத் திரிந்தவர்கள்

தாலாட்டிய தமிழன் உயிரானவர்

உடல் மண்ணுக்கென்றானவர்

வாழைபோல் பரம்பரையை

விதைத்து வளர்த்திட இரத்தம் பாய்ச்சியவர்

மண்ணின் மைந்தர்கள் உறங்கிடும்

கல்லறையல்ல

செஞ்சூரியனும் துருவ நட்சத்திரங்களுமாய்

ஒளிரும் விண்மீன்கள்

தினம்தொழுதும் சந்நிதி

பூமலர் கொண்டு

பாமலர்பாடும் அவர் பொன்னடி


அம்மா எனக்குன் துயரம் புரிகிறது

அவர்கள்

அணிந்த ஆடைகளையும்

தூக்கிய சுடுபொறிகளையும்

நடந்த பாதைகளையும் நினைக்கிறேன்

தேசத்தை நேசித்துவிட்ட

அனல் மூச்சுக்களையும்

விழித்திருந்த விழிப்பினில்

செம்பொறி ஏறிய கண்களையும் உணர்கிறேன்

கணத்தில் வெடித்திடும்

திடம்கொண்ட தோள்களையும் நானும்

தொட்டிடத் துடிக்கிறேன்.


– மா.கி.கிறிஸ்ரியன்.

(2005ம் ஆண்டு வரையப்பட்ட கவிதை)



“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?