பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே இன்றைய நாள் எமது சுதந்திர தமிழீழ விடுதலைக்காக தங்களை அற்பணித்த புனிதர்களை வணங்கும் நினைவு நாள்.
தமிழீழத்தின் விடுதலைக்காக எமது வளிகாட்டிபான மேதகு தலைவர் அவர்களின் சுய ஒழுக்கம் கட்டுப்பாடுகளை ஏற்று கடினமான பயிற்சிகளைப் பெற்று பலமுறை எதிரிகளோடு சமர் ஆடி விழுப்புண் அடைந்து இருந்தபோதிலும் தொடர்ந்து தனது சாவின்போது ஒரு சாதனை இருக்க வேண்டும் என்ற ஆழமான உணர்வோடு கரும்புலியாக வேவுப்புலியாக பல வடிவங்களாகச் சென்று தங்களின் உயிரை அறிப்பணித்தவர்கள்தான் இந்த மாவீரர்கள்'
எமது விடுதலைப் போராட்டத்தில் ஆண் பெண் இருபாலரும் சமத்துவமாகப் போராடி தாய் நாட்டின் விடுதலைக்காக தக்களின் உயிரை அற்பணித்த பெருமையை எமது தமிழீழ
மண் பெற்றுள்ளது. எனவே மாவீரர்களை பெற்று எதிரிககளின் இன அடக்குமுறைக்கு எதிராகப் போராட தங்களின் பிள்ளைகளை உபந்தளித்த எமது பெற்றோர் ஆகிய நீங்கள் சந்ததி சந்ததியாக சிரம் தாழ்த்தி கெளவ்ரிவிக்கப்பட வேண்டியவர்கள்.
தலைமுறை தலைமுறையாக இந்த மாவீரர்களின் தியாகங்களிற்குப் பின்னால் உங்களுடைடைய பெயரும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
1983ம் ஆண்டு லெப் சத்திய நாதன் தொடங்கி இறுதியாக லெப்கேணல் தெய்வீகன் வரை சுமார்50 0000 ஆயிரம் போராளிகள் தமிழீழத்தின் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவு அடைந்துள்ளார்கள்.
முன்னைய காலங்களில் புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்திலும் சிறப்பாக மாவீரர்நாள் நடைபெற்றதை நாம் நன்கு அறிவோம். தற்பொழுது எமது நாட்டில் இனவேற்றுமை உடைபவர்கள் ஆட்சியில் இருப்பதால் தமிழீழ தேசிய நிகழ்வுள் தடைசெய்யப்பட்டதோடு மட்டும் அல்லாமல் இராணுவ பூதங்களையும் ஏவிவிடப்பட்டுள்ளது.
இதை முன்கூட்டிய அறிந்த எமது தலைவர் அவர்கள் 2008ம் ஆண்டு மாவீரர்நாள் உரையின்போது எமது விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் தமிழர்களிடம் ஒப்படைப்பதாகப் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவரின் சொல்லுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முகமாக தேசிய மாவீரர் நாளை தொடர்ந்து சிறப்பாகச் செய்வதற்காக நிலையான ஒரு இடத்தை அனைத்து மக்களின் ஒத்துளைப்போடு வேண்டி அங்கே மாவீரர் மண்டபம் ஒன்று கட்டி ஐம்பதினாயிரம் மாவீரர்களின் படங்களையும் அங்கே பிறேம் பண்ணிவைப்பதோடு மட்டும் அல்லமல் எதிர்காலச்சந்ததியினரிடம் அதை ஒப்படைக்க வேண்டிய கடமை எம்மிடம் உள்ளது.
எதிர்காலத்தில் தேசிய நிகழ்வுகளை நாம் அனைவரும் ஒரே கருத்து உடையவர்களாக கலந்து சிறப்பாக செய்து வரவேண்டும் அவ்வேளையிலே எமது மாவீரர்களிற்கு நாம் செய்யும் அளப்பெரிய கடமையாகயிருக்கும் என நினைகின்றேன்.
எமது விடுதலை போராட்டத்தை ஆரம்பித்து வைத்தமே ஒளிய அதின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை ஆனால் அதற்காக பெறுமதிமிக்க விலையை கொடுத்துள்ளோம் ஐம்பதினாயிரம் போராளிகளின் உயிர் அற்பணிப்பு லக்சக்கான எமது மக்களின் உயிர் பெறுமதிமிக்க உடமை என அடங்கும்.
விடுதலைப் போராட்டத்திற்கு காலவரையறை கிடையாது ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் எமது போராட்ட வடிவத்தை மாற்றி அறிவியில் நீதியாகப் போராடி எதிரியின் பலத்தை சிதைத்து மாவீரர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும் இதுவே தமிழர் களின் அழப்பெரிய கடமையாக உள்ளது.
நன்றி k.nimal
கருத்துகள்