தமிழரின் புகழை தரணியெங்கும் பரவச்செய்த தமீழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு.
(முக்கியமான நிகழ்வுகள் மட்டும்)
1971-தலைவர் பிரபாகரன் வீட்டை விட்டு வெளியேற்றம்.
1973- தலைமறைவு வாழ்க்கை தொடக்கம்.
04-09-1974-புதிய தமிழ்புலிகள் தொடக்கம்.
27-07-1975 தலைவர் பிராபகரனின் துப்பாக்கி தனது முதல் குண்டை துப்பியநாள்,தமிழின துரோகி யாழ்பணமேயர் துரையப்பாவை சுட்டுவீழ்த்தினார்.
05-05-1976-புதிய தமிழ் புலிகள் என்ற பெயர் மாற்றப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் என்றாக்கப்பட்டது.
15-10-1981- இலங்கை இராணுவதளத்தின் மீதான முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது இதை தலைவரே முன்னின்று நடத்தினார்.
27-11-1982-விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் முதன்முதலாக களப்பலி ஆகின்றார் லெப்.சங்கர் அண்ணன், தமிழ்நாட்டில்தான் அவர் உயிர் பிரிந்தது தலைவரைவிட வயதில் மூத்ததவர்.
1982-தலைவர் அவர்களுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றறது.
18-05-1984-முதன் முதலாக சயனைட் உட்கொண்டு வீரமரணம் அடைந்தார் வீர வேங்கை பகின்.
18-08-1985-விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தொடக்ப்பட்டது.
05-07.1987-முதற் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றிகரமாக இலக்கை அடைந்து வீரகாவியமான நாள்.
15-08-1987-தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே. பிராபகரன் முதன்முறையாக மக்கள் முன்பு உரையாற்றினார்.
26-09-1987- விடுதலைப்புலிகளின் லெப் கேணல் திலீபன் இந்தியாவிற்கு எதிராக உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்துறந்தார்.
10-10-1987-2ம் லெப்.மாலதி என்கின்ற முதல் பெண்புலி களப்பலியானார்.
27-11-1989- அன்று முதல் லெப்.சங்கர் அவர்களின் நினைவாக மாவீரர்நாள் அனுஸ்டிப்பு முதன் முதலாக தொடங்கப்பட்டது.
10-06-1990-இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியது.
10-07-1990- முதன்முறையாக கடற்கரும்புலி தாக்குதல் நடத்ததப்பட்டது.
27-11-1990-இந்த வருட மாவீரர் தினத்தில் முதன் முறையாக தமிழீழ தேசியக்கொடி தலைவர் அவர்களால் ஏற்றப்பட்டது.
10-04-1991- முதல் தாக்குதல் படையணி(சால்ஸ் அன்ரனி) தொடங்கப்பட்டது.
10-06-1991-முதன் முறையாக மாவீரர் விருதுகள் தேசியதலைவரால் வழங்கப்பட்டது.
19-11-1991- விடுதலைப்புலிகளின் காவல்துறை முதன்முறையாக தலைவர் அவர்களால் தொடங்கிவைக்கப் படுகின்றது.
24-08-1994- முதலாவது பெண்கரும்புலி கப்டன் அங்யற்கண்ணி இலக்கை அடைந்து வீரமரணம்.
19-04-1995- மூன்றாம் கட்ட ஈழப்போர் தொடங்கியது.
1995- விடுதலைப்புலிகளின் தலைமையிடம் வன்னியாக மாற்றப்பட்டது.
16-07-1996- மூல்லைத்தீவு இராணுதளம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
1998-கிளிநொச்சி விடுதலைப்புலிகளால் கைப்பற்றட்டது.
01-11-2000-நோர்வேயின் சாமதானத்தூதுவர் திரு.எரிக் சோல்கெம் தமிழீழ தேசியதலைவரை சந்தித்தார்.
25.07.2001-கொழும்பு கட்டுநாயக்கா விமானதளம் மீது தமிழீழ விடுதலைப்புலிகளால்(கரும்புலி)தாக்ககப்பட்டது.
14-12-2001- முதன்முறையாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
தொடரும்…
கரிகாலன்
கருத்துகள்