முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b759

கூடுதலான ஏசியா பெண்கள் பிற பாலியலை விரும்புவதாலயே கணவர்கள் பெண்களை அடித்து கொலை செய்வதாகத் தகவல் தெரியவந்துள்ளது, ஏசியா ஆண்கள் பிற பாவியலை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என இந்தியாவில் இருந்து முகமட் அலி தெரிவித்துள்ளார். சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பிரபல நடிகை; கணவர் திடுக்கிடும் வாக்குமூலம்! பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷமுவை தவறான உறவு காரணமாக பிரபல நடிகையை அவரது கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷமு 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதுடன் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் திடீரென காணாமல் போனார். இதையடுத்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் சாக்கு மூட்டையில் நடிகை சடலமாக மீட்கப்பட்டார். நடிகை உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணையில் நடிகை ரைமா இஸ்லாமுக்கும், தனியார் தொலைக்காட்சி அதிகாரிக்கும் நீண்ட நாட்களாக உறவு இருந்து வந்துள்ளது. நடிகையின் கணவர் ஷகாவத் அலி மனைவியைப் பலமுறை கண்டித்ததாகவும், எனினும் அவர்

TAMIL Eelam news b758

சிறந்த நண்பர்கள் இல்லாத காரனத்தால் நாளாந்தம்சாவை நோக்கிச் செல்லும் தமிழர்கள் . முல்லைத்தீவு பகுதியில் இளம் பெண் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம் முல்லைத்தீவு கேப்பாபிவு கிராமத்தில் பெண் ஒருவர் தவறான முடிவு எடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கேப்பாபிலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த பெண் ஒருவர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று நண்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 27 அகவையுடைய துரை றொபின்சா என்ற யுவதியே இவ்வாறு தவறான முடிவின் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். லீசிங் நிறுவனத்தில் பணியாற்றிவந்த குறித்த யுவதிக்கு தனக்கு வாழபிடிக்கவில்லை என மன விரக்தியில் கடிதம் ஒன்றினை எழுதி உடமையில் வைத்துவிட்டு இந்த முடிவினை எடுத்துள்ளதாக முதற்கட்ட பொலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

TAMIL Eelam news b757

பிரித்தானியா இலங்கை தொடர்பில் எடுக்கும் முயற்சி கடும் கண்டனத்திற்குரியது! இலங்கையில் நீண்ட காலமாகத் தீர்வு வழங்கப்படாமல் தொடர்கின்ற வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் பிரித்தானியாவில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டின் மௌனமும், இலங்கையுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அவர் முன்னுரிமை வழங்கியுள்ளமையும் கடும் கண்டனத்திற்குரியவையாகும் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. அது மாத்திரமன்றி சர்வதேச நீதிப்பொறிமுறையின் ஊடாக தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரித்தானியா அரசாங்கம் உதவவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், அச்சங்கத்தின் பிரதிநிதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 11-01-2022 ஆம் திகதி செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்த பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் ஜனாதிப

TAMIL Eelam news b756

மெல்பனில் தூக்கத்திலேயே மரணமடைந்த தமிழ் இளைஞன்! மெல்பன் Hampton Park-ஐச் சேர்ந்த ரமணன் ராஜ்குமார் என்ற இளைஞர் கடந்த 14ம் திகதி இரவு தூக்கத்திலேயே மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரது மரணத்திற்கான பின்னணி தொடர்பில் உறுதியாக எதுவும் தெரியாது எனவும் தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார் கடந்த சில மாதங்களுக்குள் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் இவ்வாறான பல மரணங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், அரசின் இறுக்கமான அகதிகள் கொள்கை அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துவருவதாகவும் திரு.அரன் மயில்வாகனம் குற்றம்சாட்டினார். இதேவேளை ரமணனின் இறுதி நிகழ்வுகளை நடத்துவதற்கான நிதிசேகரிப்பில் தமிழ் ஏதிலிகள் கழகம் ஈடுபட்டுள்ளதாகவும் திரு.அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

TAMIL Eelam news b755

விடுதலை புலிகள் பற்றி சொல்லாமல் விட்டால் ஆசாங்கம் நடத்த முடியாது என கூறும் சிங்கள வெறியர்கள் விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்பித்தது எப்படி? அஜித் நிவாட் கப்ரால் வெளியிட்ட தகவல் -செய்திகளின் விடுதலைப்புலிகளுடன் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் சில தினங்கள் ஆயுதங்கள் இல்லாத நிலையும் காணப்பட்டிருந்தது. அவற்றை ஊடகங்களுக்கு அன்று சொல்லியிருந்தால், விடுதலைப் புலிகள் அன்றே எமக்கு அடித்திருப்பார்கள். ஆகவே எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இதனை குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,

TAMIL Eelam news b754

பிரிட்டனில் வாழும் புலம்பெயர் இலங்கையருடன் இணைந்து செயற்படத் தயார் -கோட்டாபய அறிவிப்பு (படம்) பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட்டிடம்(Lord Tariq Ahmed) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksha) கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய அமைச்சரை, இன்று அரச தலைவர் அலுவலகத்தில் சந்தித்தபோது அவர் இந்த விடயத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளதென ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் தெரிவித்தார். அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு, நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக்கூடிய அணுகுமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து மனித உரிமை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான முதலீட்டு

TAMIL Eelam news b783

நியாயமான தீர்வைப் பெற்றுத்தருவது பிரிட்டனின் கடமை! - இரா.சம்பந்தன் (Photo) இந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தாயகத்தில் தனித்துவ இறைமையுடைய இனமாக வாழ்ந்தார்கள், அந்த தமிழர் தேசத்தை சிங்கள தேசத்துடன் இணைத்தவர்கள் பிரிட்டிஷ் கொலனித்துவ ஆட்சியாளர்கள் தான் என கொழும்புக்கு வருகை தந்திருக்கும் பிரிட்டனின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் தாரிக் அஹமட் பிரவுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் இன்று (20) கொழும்பில் அவரைச் சந்தித்து விரிவான பேச்சுக்களில் ஈடுபட்டனர். அப்போதே மேற்படி கருத்தை சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். நடந்த சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல், தற்போதைய மனித உரிமைகள் நிலைமை, அரசியல் தீர்வு ஆகிய மூன்று அம்சங்கள் குறித்தே சம்பந்தன் இந்தச் சந்திப்பில் அதிகம் வலியுறுத்தினார். இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்புக்களில் தாமும் இந்த மூன்றையுமே வலியுறுத்தினார் என்றும், அவற்றை ஆக்கபூர்வாக அணுகுவதற்குத் தாங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என