முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 687

 ‘பெண்கள் மாதவிடாய் காலத்தில் இதை செய்யலாமா?… நிதி ஆயோக் விளக்கம்! மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா என்பது குறித்த குழப்பத்திற்கு நீதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் விளக்கமளித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசிகள் குறித்து நிதி ஆயோக் மருத்துவர் வி.கே.பால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்துப் பேசியவர், மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அதில் எந்த பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை. மாதவிடாயைக் காரணமாகக் கூறி தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தள்ளிப்போட வேண்டிய அவசியமில்லை என்று விளக்கமளித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாகச் சமூகவலைத்தளங்களில் பரவி வந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

TAMIL Eelam news 686

   நாம் சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கியே தொடர்ந்து  பயணிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் திருகோணமலையிலும் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் பாரிய ஆட்சி மாற்றமொன்று ஏற்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் இன, மத பேதமின்றி சகல விதமான சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே தந்தை செல்வா 1949ஆம் ஆண்டு கட்சியை ஆரம்பித்தார். நாங்களும் அவரது கொள்கைகளுக்கமையவே கடந்த 70 வருடங்களாக பயணித்து வருகின்றோம். அதிகளவான கட்சிகள் அவரது நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளன. அந்தவகையில் நாமும் அவைகளை அடையக்கூடிய நிலையிலேயே தற்போது இருக்கின்றோம். சில பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து இருக்கின்றோம். எதிர்வரும் காலங்களிலும் எங்கள

TAMIL Eelam news 685

 மோசமடையும் இந்தியாவின் நிலைமை? கவலையடைந்த மைக்ரோசாப்ட் தலைமை    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் தற்போதைய சூழ்நிலையால் மனமுடைந்துள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை நிறைவேற்று அதிகாரி சத்ய நாடெள்ளா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய சூழ்நிலையால் மனமுடைந்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சத்ய நாடெள்ளா வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய சூழ்நிலையால் மனமுடைந்துள்ளேன். இந்தியாவுக்கு அமெரிக்க அரசு உதவுவதற்கு நான் நன்றி செலுத்துகிறேன். மைக்ரோசாப்ட் தொடர்ந்து அதன் வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை நிவாரண முயற்சிகளுக்கு பயன்படுத்தும். மேலும், ஒட்சிசன் செறிவு சாதனங்களை வாங்குவதற்கும் மைக்ரோசாப்ட் உறுதுணையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்

TAMIL Eelam news 684

 யாழில் யுவதி ஒருவருக்கு நேரவிருந்த விபரீதம்; காப்பாற்றிய பொதுமக்கள்!   யாழ்.நாவற்குழி பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற யுவதி ஒருவர் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது. யாழ்.சாவகச்சோி – நாவற்குழி பாலத்திற்குள் பாய்ந்து குறித்த பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தற்கொலைக்கு முயன்ற யுவதி யாழ்.ஸ்ரான்லி வீதியை சேர்ந்தவர் எனவும் காதல் தோல்வினால் அவர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.   

TAMIL Eelam news 683

 இலங்கையில் ஆபத்தான காச்சல் பரவுகிறது! வைத்திய நிபுணர் மக்களிற்கு எச்சரிக்கை   இலங்கையில் தற்போது பலவித காய்ச்சல் வைரஸ் பரவிவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறுவர் தொற்றுநோய் சார்ந்த விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்தார். டெங்கு காய்ச்சல் போன்று, வைரஸ் காய்ச்சல் பரவியிருப்பதாகவும் நாட்டின் பல பகுதிகளிலும் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெறுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். குறிப்பாக சிறுவர்களிடத்திலேயே இவ்வாறு வைரஸ் காய்ச்சல் பரவுகிறது எனக் கூறிய அவர், வாய் சுற்றி அரிப்பு ஏற்படுதல், கை, கால்களில் சிறப்புநிற அடையாளங்கள் ஏற்படுதல் போன்றன அதன் அறிகுறிகளாகும் என்றும் தெரிவித்தார்.

TAMIL Eelam news 682

 கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம்   கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்  மரணமடைந்த  நிலையில் அவரது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டத்தில் அவருக்கு கொவிட் 19 தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறிதத் பெண் இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இப்பெண்ணின் மரணத்தை தொடர்ந்து அவர் கொவிட் 19 காரணமாக இறந்திருக்கலாம் என பரபரப்பு ஏற்பட்ட அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பட்டு அதன் முடிவுகளின் படி, அவர் கொவிட் தொற்றினால் உயிரிழக்கவில்லை எனவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த பெண் பாணந்துறை பகுதியைச்சேர்ந்த எம். இசற். எம். எச். பாத்திமா சியானா வயது 47 என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

TAMIL Eelam news 681

 நான் ஏன் குப்பி அணிந்தேன்.! எதுக்கு உறவை துறந்து வந்தேன் நான் ஏன் குப்பி அணிந்தேன்.! எதுக்கு உறவை துறந்து வந்தேன் விழிகள் ஒளிர பயணிக்கும் அவனுக்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும் திடமற்ற வினாக்கள். வினாடி கரையும் முன்னே கரைந்திடும் கேள்விகள். விருட்சமாய் வளர்ந்து நின்ற வேங்கை அணியின் விழுது அவன் குப்பியை தடவி பார்க்கும் கரத்தழுவல்களுக்குள்ளே ஆழ்ந்து தூங்கி கொண்டிருக்கும் விசத்தின் உச்சத்தை அவன் விரும்பியே ஏற்றிருந்தான். அவன் கரமும் மனமும் அடிக்கடி குப்பியுடன் பேசிக்கொண்டே இருந்தன. சாவதற்கு வழிகாட்டும் கைகாட்டியிடம் அதீத பாசம் வைத்தே இருந்தான் சுத்தி நின்று சூழ்ந்த சூறை காற்றுக்கிடையில் அவன் காத்து கிடந்தது தேச விடுதலை பசியோடு அது அவன் குப்பிக்கும் தெரியும் அவனின் உயிரை உண்ண காத்து கிடந்தது. அவனுக்காகவே கருவுதித்த புதுப்பிறப்பு மனம் முழுக்க வைத்த ஆசையை வளர்த்து சொந்தம் விட்டு சொந்தமாக கழுத்தில் ஏந்தி வேறொரு வாழ்வுக்குள் அவன் புகுந்து விட்டான் வெண்ணிறமும் மனதை கொள்ளை கொள்ளும் அழகும் மிகவும் பிடித்த ஒன்று அதனால் தான் நெஞ்சுக்குழியில் குப்பியை ஏற்று மண்ணுக்காய் அவன் வாழ்ந்தான். வஞ்சிகள் சூழ்