முல்லைத்தீவில் கடத்தப்பட்டாரா மாணவி..!

By Sumithiran 7 மணி நேரம் முன்
முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற 15 வயதே ஆன மாணவி காணாமற்போயுள்ள நிலையில் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு சென்ற 15 வயதுடைய மாணவியே காணாமல் போயுள்ளதாக அவரது அவரது தாயாரால் மாங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை
இதுவரை குறித்த மாணவியான தமது மகள் தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
தென்பகுதியிலிருந்து வந்தவர் கடத்தல்
இதனிடையே தென்பகுதியில் இருந்து குறித்த பிரதேசத்திற்கு வேலைக்காக வந்து தங்கியிருந்த ஒருவரே மேற்படி சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்