முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 479 தமிழ் மக்கள் அனைத்து சர்வதே நாடுகளிலும் தங்களின் போராட்டங்களை நடத்துகின்றார்கள்,

இன அழிப்புப் போரில் தமிழர்களின் இழப்பிற்கு இதுவரை இல்லை நீதி – பிரித்தானிய நாடாளுமன்றில் அறிக்கை!
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரித்தானியா வாழ் தமிழர்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் சுதந்திர தினம் கரி நாள் என பிரகடனப்படுத்தி வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி 4 நாட்களுக்கு பேரணி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இன அழிப்புப் போரில் தமிழர்களின் இழப்பிற்கு இதுவரை இல்லை நீதி - பிரித்தானிய நாடாளுமன்றில் அறிக்கை! | Tamils Racis British Parliament Sl Government இவ்வாறான நிலையிலேயே பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளதாவது, “நியாயமான ஆட்சி நிர்வாகத்தை உறுதிப்படுத்தி, ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை நோக்கிய பாதையில் நாட்டை முன்னகர்த்திச் செல்லக்கூடியவாறாக இலங்கையின் அரச கட்டமைப்பு மாற்றமடைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 75 வருடகால வரலாற்றில் சுமார் பத்தாயிரம் தமிழர்களின் இழப்பிற்கு அடிப்படை காரணம் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நிலையான அரசியல் தீர்வொன்றை சிறிலங்கா அரசாங்கம் கண்டடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இராணுவமயமாக்கல், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பன தொடர்பில் நீதி, பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை மற்றும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வினை அடைவதில் ஏற்பட்டுள்ள தோல்வியை முன்னிறுத்தி தமிழர்கள் ஆதீனத்தை புறக்கணித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான சம்பவங்கள், காணி அபகரிப்பு மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் இன்னமும் தொடர்வதாகவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?