ஆனால் இன உணர்வு அந்த மண்ணில் தொடர்ந்து இருப்பதால் அக்குழந்தையை மாற்று இனத்தவர்களின் கையில் சென்று விடக்கூடாது என்பதற்காக பல தமிழ் தாய்மார்கள் அதை தத்து எடுப்பதற்காக வாதாடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது,
வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் சிசு மீட்பு -தமிழர் பிரதேசத்தில் சம்பவம்
திருகோணமலை உப்புவெளி கன்னியா - சர்தாபுர வீதி, கிளிகுஞ்சிமலை வள்ளுவர் பருத்தி வீடமைப்பு வளாகத்தில் இன்று (04) வீதியோரத்தில் ஒரு வயதுடைய சிசு ஒன்று காணப்பட்ட நிலையில், அதனை மீட்ட காவல்துறையினர் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அப்பகுதி மக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில் தலைமை ஆய்வாளர் கே.எஸ்.லலித் குமார உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டனர் .
மோசமான வானிலை
வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் சிசு மீட்பு -தமிழர் பிரதேசத்தில் சம்பவம் | A Little Baby Was Left On The Road
ஒரு துணியில் உரப் பையொன்றால் சுற்றப்பட்டு குழந்தை வைக்கப்பட்டிருந்ததாகவும், மோசமான வானிலை காரணமாக, அருகில் இருந்த பெண் ஒருவர், காவல்துறையினர் வீட்டிற்கு வரும் வரை, மழையிலிருந்து குழந்தையைப் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நன்கு வளர்ந்த குழந்தையாகவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருகோணமலை வைத்தியசாலையில் ஒப்படைப்பு
வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் சிசு மீட்பு -தமிழர் பிரதேசத்தில் சம்பவம் | A Little Baby Was Left On The Road
உப்புவெளி காவல் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக கட்டளைத் அதிகாரி டி.எச்.என்.ஜெயமாலி உட்பட பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் சிறுமியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று தேவையான ஆடைகளை அணிவித்து திருகோணமலை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
உப்புவெளி காவல் நிலையப் பிரதான காவல்துறை பரிசோதகர் கே.எஸ்.லலித் குமாரவின் பணிப்புரையின் பேரில் சிறுவர் துஷ்பிரயோகப் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி, பெண் உப காவல்துறை பரிசோதகர் டி.எச்.எம்.ஜெயமாலி உள்ளிட்ட குழுவினர் குழந்தையின் தாயாரைக் கண்டுபிடிக்க விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தத்தெடுக்க போட்டி
வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் சிசு மீட்பு -தமிழர் பிரதேசத்தில் சம்பவம் | A Little Baby Was Left On The Road
இதற்கிடையில் குழந்தையை காவல்துறையினர் கொண்டு வந்ததையடுத்து மூன்று தாய்மார்கள் குழந்தையை தாம் தத்தெடுப்பதாக காவல்நிலையம் வர, மேலும் இருவர் காவல்துறையினரிடம் தொலைபேசியில் பேசி குழந்தையை தத்தெடுப்பதாக கோரியுள்ளனர். நீதிமன்றத்தின் ஊடாக கோரிக்கையை முன்வைக்குமாறு தாய்மார்களிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்