தலைவரின் மகள் துவாரகாவுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்? மாட்டிக்கொண்ட புலம்பெயர் கும்பல்!!
தலைவரும் அவரது துணைவியார் மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி ஒரு குழு புலம்பெயர் தேசங்களில் பெருமளவு பணப்பறிப்புக்களை மேற்கொண்டு வருவது பற்றி ‘சொன்னாலும் குற்றம்’ ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.
(அந்தச் செய்தியைப் படிக்க விரும்பினால் இங்கே அழுத்துங்கள்)
புலம்பெயர் நாடுகளில் தமிழ் வர்த்தகர்களைக் குறிவைத்து பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அந்தப் பணப்பறிப்பு நடவடிக்கையின் போது, முக்கியமான ஒரு காரியத்தையும் கச்சிதமாகச் செய்துவருகின்றார்கள்.
அவர்கள் கூறுவதில் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்புகின்றவர்கள், தலைவரின் மகள் துவாரகா என்று கூறப்படுகின்ற ஒரு இளம் பெண்ணிடம் அழைத்துச்சென்று பேசவைப்பார்களாம்.
அந்தப் பெண்ணும் முகமூடியுடன் வந்து கச்சிதமாக பல விடயங்களைப் பேசுமாம்.
கழுத்தில் குப்பியோடு துவராகா விர மரணம் அடைந்த நிலையில்
இப்படி இருக்க, லண்டனில் இருந்து 'துவாரகா' என்று கூறப்படுகின்ற அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்கென்று அழைத்துச்செல்லப்பட்ட ஒருவர், அந்தப் பெண்ணிடம் ஒரு கேள்வியைக் கேட்டாராம்.
“ வன்னியில் உங்களுக்கு வாகனம் ஓட்டப் பழக்கியவர் யார்..?”- இதுதான் துவாரகா என்று காண்பிக்கப்பட்ட பெண்ணிடம் அவர் எழுப்பியிருந்த கேள்வி.
தடுமாறிய அந்தப் பெண் முதலில்’..மறந்துவிட்டேன்..” என்று கூறினாராம். சிறிது நேரத்தின் பின்பு அனைவரும் அறிந்த தலைவரின் மெய்ப்பாதுகாவலராக முன்னர் கடமையாற்றிய ஒரு நபரின் பெயரைக் கூறினாராம்.
அந்தப் பதிலால் தான் துவாரகா என்று கூறி பேசவந்த பெண் உண்மையிலேயே துவாரகா அல்ல என்பது உறுதியானதாம்.
உண்மையிலேயே துவாரகாவுக்கு வாகனம் ஓட்டப் பழக்கியது ஒரு சிரேஷ்ட போராளியின் மனைவிதான். அவர் தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வருகின்றார்.
'துவாரகா' என்று கூறப்பட்ட பெண்ணைப் பார்ப்பதற்காகச் சென்ற வர்த்தகர், சுவிஸ் செல்வதற்கு முன்னதாக குறிப்பிட்ட அந்தப் போராளியைச் சந்தித்து துவாரகா பற்றிய விடயங்களைக் கேட்டறிந்துகொண்டதுடன், துவாரகாவுக்கு மாத்திரம் தெரிந்த உண்மைகள் பற்றியும் கேட்டறிந்துவிட்டுத் தான் புறப்பட்டிருக்கின்றார்.
புலம்பெயர் தமிழ் மக்களின் உணர்வுகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு மிகப்பெரிய சதி பல சந்தர்ப்பங்களிலும் அம்பலப்பட்டு வெளிச்சத்துக்கு வந்திருந்தாலும், அந்தச் சதியினை மேற்கொண்டுவருகின்ற குழு தொடர்ந்தும் பணவேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்