அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை - நேரடியாகவே தெரிவித்தாரா அமெரிக்க தூதுவர்!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் குடியுரிமை தொடர்பான அவரது கோரிக்கையை அமெரிக்கா இதுவரை பரிசீலிக்கவில்லை எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் கடந்த ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நாடு திரும்பினார். அதன் பின்னர் அவர் அண்மையில், துபாய் நாட்டுக்குச் சென்றுள்ளார்.
துபாயில் கோட்டாபய
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை - நேரடியாகவே தெரிவித்தாரா அமெரிக்க தூதுவர்! | Gotabaya America Visa Reject Us Ambassoder Sayed
இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவிக்கையில்,
“கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை மீளப்பெறுவதற்கான எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. கோட்டாபய ராஜபக்ச அவரது குடும்ப உறுப்பினர்களுடன் துபாய் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இம்மாதம் 6 அல்லது 7 ஆம் திகதி அவர் நாடு திரும்புவார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விசா மறுப்பு
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை - நேரடியாகவே தெரிவித்தாரா அமெரிக்க தூதுவர்! | Gotabaya America Visa Reject Us Ambassoder Sayed
இதேவேளை, எவ்வளவு முயற்சி செய்தாலும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான வீசா வழங்கப்பட மாட்டாது எனவும் அதனால் முயற்சிக்க வேண்டாம் எனவும் அமெரிக்க தூதுவர், கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றே அவர் இதனை தெரிவித்துள்ளார் எனவும் தெரிலிக்கப்பட்டுள்ளது.
குழப்பத்தில் கோட்டாபய குடும்பம்
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை - நேரடியாகவே தெரிவித்தாரா அமெரிக்க தூதுவர்! | Gotabaya America Visa Reject Us Ambassoder Sayed
அமெரிக்கத் தூதுவர் இந்தச் செய்தியைத் தெரிவிக்கும் போது கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச உட்பட முழு குடும்பமும் உடனிருந்ததாகவும் அறியமுடிகிறது.
இந்த செய்தியால் அவர்கள் அனைவரும் குழப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இந்த தகவலின் முழுமையான உண்மைத் தன்மை தொடர்பில் எந்த விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் இது வரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்