அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை - நேரடியாகவே தெரிவித்தாரா அமெரிக்க தூதுவர்!
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் குடியுரிமை தொடர்பான அவரது கோரிக்கையை அமெரிக்கா இதுவரை பரிசீலிக்கவில்லை எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் கடந்த ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நாடு திரும்பினார். அதன் பின்னர் அவர் அண்மையில், துபாய் நாட்டுக்குச் சென்றுள்ளார்.
துபாயில் கோட்டாபய
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை - நேரடியாகவே தெரிவித்தாரா அமெரிக்க தூதுவர்! | Gotabaya America Visa Reject Us Ambassoder Sayed
இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவிக்கையில்,
“கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை மீளப்பெறுவதற்கான எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. கோட்டாபய ராஜபக்ச அவரது குடும்ப உறுப்பினர்களுடன் துபாய் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இம்மாதம் 6 அல்லது 7 ஆம் திகதி அவர் நாடு திரும்புவார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விசா மறுப்பு
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை - நேரடியாகவே தெரிவித்தாரா அமெரிக்க தூதுவர்! | Gotabaya America Visa Reject Us Ambassoder Sayed
இதேவேளை, எவ்வளவு முயற்சி செய்தாலும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான வீசா வழங்கப்பட மாட்டாது எனவும் அதனால் முயற்சிக்க வேண்டாம் எனவும் அமெரிக்க தூதுவர், கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றே அவர் இதனை தெரிவித்துள்ளார் எனவும் தெரிலிக்கப்பட்டுள்ளது.
குழப்பத்தில் கோட்டாபய குடும்பம்
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அனுமதியில்லை - நேரடியாகவே தெரிவித்தாரா அமெரிக்க தூதுவர்! | Gotabaya America Visa Reject Us Ambassoder Sayed
அமெரிக்கத் தூதுவர் இந்தச் செய்தியைத் தெரிவிக்கும் போது கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச உட்பட முழு குடும்பமும் உடனிருந்ததாகவும் அறியமுடிகிறது.
இந்த செய்தியால் அவர்கள் அனைவரும் குழப்பமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இந்த தகவலின் முழுமையான உண்மைத் தன்மை தொடர்பில் எந்த விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் இது வரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்