சிறிலங்கா அதிபரின் அறிவிப்பு கேலிக்குரியது - உருத்திரகுமாரன்
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையினை தரம் தாழ்த்தி வெளிப்படுத்தவே சிறிலங்கா அதிபர் விரும்புகிறார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கிடையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையில், இவ்வாறு கூறியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு
சிறிலங்கா அதிபரின் அறிவிப்பு கேலிக்குரியது - உருத்திரகுமாரன் | Ethnic Problem Will Be Resolve Ranil Announcement
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத்தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இறுகப் பிணைக்கப்பட வேண்டும்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை கருத்தில் கொண்டு அரசியல் தீர்வானது ஈடுசெய்நீதியின் அடிப்படையில் அடிப்படையிலும், ஈழத்தமிழ் தெரிவு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அமையாத ஏற்பாடு எதுவும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையப் போவதில்லை.
அதிபரின் அறிவிப்பு சில மட்டங்களில் ஆரவாரங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளமையினை அவதானிக்க முடிவதோடு, இது கேலிக்கும் நகைப்புக்கும் உரியதோர் அறிவிப்பு என்பதனை அரசியல் புரிந்தோர் அனைவரும் அறிவர்” எனத் தெரிவித்துள்ளார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்