முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 926 கனடாவில் பாரிய கத்திகுத்து தாக்குதல் -10 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்

கனடாவில் பாரிய கத்திகுத்து தாக்குதல் -10 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்
கனடாவில் பாரிய கத்திகுத்து தாக்குதல் கனடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அம்மாகாணத்தின் ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் வெல்டன் உள்ளிட்ட 13 இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை தேடி வருவதாக றோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை உதவி ஆணையர் ரோண்டா பிளாக்மோர் ஒரு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். இரண்டு சந்தேக நபர்கள் கனேடிய காவல்துறை தாக்குதலை நடத்திய சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. 31 வயதான டேமியன் சாண்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோர் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்படுகின்றனர். "சந்தேக நபர்கள் கறுப்பு நிற நிசான் ரோக் [வாகனத்தில்] இருக்கலாம்," என்று றோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை (RCMP) அதிகாரி சஸ்காட்செவன் கூறினார், ஆண்களையோ அல்லது காரையோ பார்க்கும் எவரும் அவர்களில் இருந்து விலகி இருக்குமாறும் காவல்துறையை அழைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமரின் அறிவிப்பு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சஸ்காட்சுவானில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் நடத்தப்பட்ட தாக்குதல்களை "பயங்கரமான மற்றும் இதயத்தை உடைக்கும்" செயல் என்று விபரித்தார். அத்துடன் தாக்குதல் தொடர்பில் முதலில் தகவல் தெரிவித்தவர்களுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்தார். "நேசிப்பவரை இழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களைப் பற்றி நான் நினைக்கிறேன்," என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கனேடிய பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ, சஸ்காட்சுவான் குடியிருப்பாளர்களை " அவர்களது இடத்தில் தங்குமாறு" வலியுறுத்தினார். "சஸ்காட்செவனில் உள்ள அனைவருக்கும், குறிப்பாக ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் பகுதிக்கு அருகாமையில் உள்ளவர்கள், தயவுசெய்து தமது இடத்தில் தங்கி பாதுகாப்பாக இருங்கள்" என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவசரகால நிலை பிரகடனம் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பகுதியான ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷனின் (JSCN) பழங்குடி சமூகத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது காயமடைந்தவர்களை தொடர்பு கொள்ள கோரிக்கை இதேவேளை காயமடைந்தவர்களை தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பலர் தாங்களாகவே மருத்துவமனைக்கு சென்றிருக்கலாம் என்று காவல்துறை நம்புகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?