முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 793 நடைமுறைக்கு சாத்தியப்படாத திட்டம்.

இலங்கையில் டொலர்களை கண்டுபிடிக்கும் யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள வைத்தியர்
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக டொலர்களை கண்டுபிடிக்கும் யோசனையொன்றை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாட்டில் உள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தனியான விடுதியொன்றை உருவாக்குவதே டொலரைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழியாகும் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் டொலர்களை கண்டுபிடிக்கும் யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள வைத்தியர் | Srilanka Economic Crisis டொலர்களை கண்டுபிடிப்பதற்கான யோசனைகள் இதற்கு மேலதிகமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பிரதேசத்தில் வெளிநாட்டில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியான வைத்தியசாலையை உருவாக்குவது அல்லது நாட்டில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளில் தனியான விடுதிகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவது டொலர்களை கண்டுபிடிக்க வழி வகுக்கும். இலங்கையில் டொலர்களை கண்டுபிடிக்கும் யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள வைத்தியர் | Srilanka Economic Crisis மேலும், இலங்கை மாணவர்கள் மருத்துவம் மற்றும் ஏனைய கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் நாட்டில் டொலர்களை மிச்சப்படுத்த முடியும் எனவும்,இதற்கான வசதிகளை ஏற்படுத்துவதே இதற்கு தீர்வாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தவிர வெளிநாட்டு மாணவர்களுக்காக இலங்கையில் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதன் மூலமோ அல்லது உள்ளூர் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கென தனியான துறைகளை நிறுவுவதன் மூலமோ பெரும் தொகை டொலர்களை சம்பாதிக்க முடியும் எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார். இதனை கருத்திற்கொண்டு இந்த நாட்டில் தேவையான சில மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்ய தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம் டொலர்களை சேமிப்பதற்கான மற்றொரு சிறந்த வழியாக அமையும் என்றும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?