கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அவுஸ்திரேலிய கப்பல்! வெளியான பின்னணி
அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் அந்நாட்டின் எல்லைப் படைக் கப்பலில் இலங்கையை சேர்ந்த 46 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 06 ஆம் திகதி மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடி இழுவை படகு மூலம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழு கடல் பயணத்தை ஆரம்பித்த நிலையில் ஜூலை 21 திகதி அவுஸ்திரேலியாவின் கடல் எல்லை வழியாக அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர முயற்சித்த போது, அவுஸ்திரேலிய எல்லைப் படையினர் குறித்த இயந்திரப்படகை கைப்பற்றி சோதனையிட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அவுஸ்திரேலிய கப்பல்! வெளியான பின்னணி | Australian Ship Arriving At Colombo Port46 People
இதன்போது படகில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய எல்லைப் படைக் கப்பலில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குழுவொன்று நாட்டிற்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட முதல் சந்தர்ப்பமும் இதுவாகும் என அவுஸ்திரேலிய எல்லைப் படையின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் கமாண்டர் கிறிஸ் வாட்டர்ஸ் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அவுஸ்திரேலிய கப்பல்! வெளியான பின்னணி | Australian Ship Arriving At Colombo Port46 People
இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களை அவுஸ்திரேலிய எல்லைப் படை, இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஊடாக கொழும்பு துறைமுகத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான செய்திகள்...
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்