முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 779 புலம்பெயர்ந்தவர்களுக்கு சாதக நிலை

புலம்பெயர்ந்தவர்களுக்கு சாதக நிலை - கனேடிய நீதிமன்றம் வழங்கிய வரலாற்று தீர்ப்பு
கனேடிய நீதிமன்றம் வழங்கிய வரலாற்று தீர்ப்பு பெற்றோர் உளவாளிகள் என தெரியவந்ததால் குடியுரிமையை இழந்த நபருக்கு கனேடிய உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. கனடாவில் பிறந்ததால் கனேடிய குடியுரிமை பெற்ற ஒருவருடைய பெற்றோர் ரஷ்ய உளவாளிகள் என பின்னர் தெரியவந்ததால் அவர் கனேடிய குடியுரிமையை இழந்த நிலையில், அவருக்கு ஆதரவாக கனேடிய உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. ரொரன்றோவில் பிறந்த அலெக்சாண்டரின் (Alexander Vavilov) பெற்றோர் போலியான பெயரில் வாழ்ந்துவந்த ரஷ்ய உளவாளிகள் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டு அலெக்சாண்டரின் பெற்றோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். இந்த விடயம் தெரியவந்ததும், கனேடிய குடியுரிமை பதிவாளர் அலெக்சாண்டரின் குடியுரிமைச் சான்றிதழை ரத்து செய்துவிட்டார். கனடாவில் பிறந்தவர்களுக்கு கனேடிய குடியுரிமை வழங்கப்படும் நிலையில், குடியுரிமைச் சட்டத்தின் கீழ், ஒரு நாட்டின் தூதரக அலுவலர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படாது என்ற விதிவிலக்கு உள்ளது. அதன்படி அலெக்சாண்டரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அதை எதிர்த்து கனேடிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, கனேடிய நீதிமன்றம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை அளித்தது. அலெக்சாண்டருக்கு தான் ஒரு கனேடிய குடிமகன் என்பது மட்டுமே தெரியுமேயொழிய, அவரது பெற்றோர் ரஷ்ய உளவாளிகள் என்பது தெரியாது என்பது முதலான சில முக்கிய காரணங்களால், அவருக்கு மீண்டும் கனேடிய குடியுரிமை வழங்கப்பட்டது. புலம்பெயர்ந்தவர்களுக்கு சாதக நிலை புலம்பெயர்ந்தவர்களுக்கு சாதக நிலை - கனேடிய நீதிமன்றம் வழங்கிய வரலாற்று தீர்ப்பு | Canada S Supreme Court Canadian Citizenship இந்த தீர்ப்பின் முக்கியத்துவம் என்னவென்றால், எளிமையாகக் கூறினால், புலம்பெயர்தல், குடியுரிமை, பாஸ்போர்ட் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளை எதிர்த்து இனி நீதிமன்றம் செல்லலாம் என்பதை கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளது. அத்துடன், இனி கனேடிய குடியுரிமை பதிவாளர் போன்ற அதிகாரிகள் புலம்பெயர்ந்தவர் ஒருவரது குடியுரிமை விடயத்தில் முடிவெடுக்கும்போது, பல்வேறு காரண காரியங்களை அலசி ஆராய்ந்து, பல படிநிலைகளைப் பின்பற்றித்தான் முடிவெடுக்கவேண்டும் என்ற ஒரு புதிய விதிமுறைக்கும் நீதிமன்றம் வழிவகை செய்துள்ளது எனக் கூறப்படுகிறது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?