முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 770 வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின்

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்!(Photo)
'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் நூறு நாட்கள் நடைபெறவுள்ள செயல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று(1)காலை மன்னார் பிரதான சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நூறு நாட்கள் நடைபெறவுள்ள செயல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்!(Photo) | Coordination Group100 Day Mission Begins Mannar குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ , மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ். திலீபன் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் ,விவசாய, மீனவ சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் , மாணவர் அமைப்புகள்,சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், மன்னார் மெசிடோ பணியாளர்களும் கலந்து கொண்டார்கள். இந்த செயற்திட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் மனு ஒன்று வாசிக்கப்பட்டது.
அதிகார பரவலாக்கம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்!(Photo) | Coordination Group100 Day Mission Begins Mannar இந்த மனுவில்,“நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசு கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்.வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும். 13 வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகார பரவலாக்கதுக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மை தமிழ் மக்களான நாம் ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகளின் இனவாதக் கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம். அது இன்று வரை தொடர்கிறது. இதுவே தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகார பரவலாக்கம் குறித்து சிந்திக்கத் தூண்டியது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்!(Photo) | Coordination Group100 Day Mission Begins Mannar இதன் நியாயத்தன்மையை பிராந்திய நட்பு நாடான இந்தியாவும் சர்வதேச நாடுகளும் என்றோ ஏற்றுக்கொண்டுள்ளன. அதன் விளைவே இந்தியா, இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான அதிகார பரவலாக்கம் சார்ந்து இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் (1987 இன் இந்திய - இலங்கை உடன்படிக்கை), 1999 – 2008 வரையான காலப்பகுதியில் நோர்வேயின் மத்தியத்துவம் மற்றும் 2002இல் இலங்கையில் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் மீளக் கட்டுமானம் சார்ந்து பங்களிப்பு செய்வதற்கு ஜப்பானின் அமைச்சரவை திரு.யசூசி அகாசி அவர்களை நியமித்தமை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும். அரசியல் தீர்வு 1987 இன் பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசுகள் எதுவுமே அதிகார பரவலாக்கத்தை நிராகரிக்கவில்லை. விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் அதிகார பரவலாக்க உரையாடலை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. 1987இல் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக அதிகார பரவலாக்கத்துக்கான 13வது திருத்தச்சட்டத்தை அரசியலமைப்பில் இணைத்தார். வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்!(Photo) | Coordination Group100 Day Mission Begins Mannar 1990இல் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அரசியல் தீர்வுகளுக்கான திட்டங்களை முன்வைத்தார். இவரின் காலத்தில், 1991இல், திரு. மங்கள முனசிங்க தலைமையில் 45 பேர் கொண்ட நாடாளுமன்ற தெரிவுக் குழு அமைக்கப்பட்டு தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. 1994 சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாயிருந்த காலத்தில், 1995இல் நீலன் திருச்செல்வம் மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் “ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு” அடங்கலான தீர்வுப் பொதி தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2001இல் ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கம் நோர்வே மத்தியத் துவத்துடன் சுயாட்சி (பெடரல் ) முறையில் அதிகார பரவலாக்கத்துக்கு இணங்கியது நினைவுகூறத்தக்கது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம்!(Photo) | Coordination Group100 Day Mission Begins Mannar 2015இல் ஆட்சிக்கு வந்த விக்கிரமசிங்க சிறிசேன “நல்லாட்சி” அரசு, ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் ஏற்கப்பட்ட தீர்மானத்தின் இணைப்பங்காளியாக இருந்தது. இத்தீர்மானத்தின் செயற்பாட்டு உறுப்புரை 16 ஆனது, அரசியல் தீர்வை, அதிகார பரவலாக்கத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது. அவ்வகையில், வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு, அதிகார பரவலாக்கம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாயிருப்பதுடன், சர்வதேச சமூகத்தினால், ஐக்கிய நாடுகள் சபையினாலும் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும். எனவே, எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கத்திற்கும், நட்பு நாடான இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்தி கொண்டு வடக்கு கிழக்கு வாழ் மக்களான நாம், எமது சாத்வீகமான, ஜனநாயகமான நூறு நாட்கள் செயல்முனைவு ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கிறோம். வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்”என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?