வெளிநாடொன்றில் தமிழரின் செயற்பாடு- அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை
தமிழருக்கு விதிக்கப்பட்ட அபராதம்
மலேசியாவை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு பாரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புலேந்திரன் பழனியப்பன் (51) என்ற இந்திய வம்சாவளி தமிழர் அனுமதியின்றி பாம்புகளை இறக்குமதி செய்த குற்றத்திற்காக 3,600 டொலர்களுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
கடத்தப்பட்ட மலைப்பாம்புகள்
மலேசியாவில் வசிக்கும் பாரவூர்தி ஓட்டுனரான பழனியப்பன் என்பவருக்கு சிங்கப்பூருக்கு பாம்புகளை கடத்தியிருக்கிறார். மலைப்பாம்புகள் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்படவில்லை என்பது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கான தண்டனைகளும் பரிசீலக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடொன்றில் தமிழரின் செயற்பாடு- அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை
உலகின் மிக நீளமான பாம்பான இராச மலைப்பாம்புகள் (reticulated pythons) தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டவை. பல நாடுகளில், அதன் தோலுக்காகவும், பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தவும், செல்லப்பிராணிகளாக விற்பனை செய்யவும் கொல்லப்படுகின்றன.
பழனியப்பன் ஓட்டிச் சென்ற மலேசியப் பதிவு செய்யப்பட்ட கொண்டெய்னர் லொறியை சோதனை செய்த குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் ஏப்ரல் 7ஆம் திகதி பாம்புகளை கைப்பற்றினர். இரண்டு மலைப்பாம்புகளும் கடுமையான, நாள்பட்ட மற்றும் மீளமுடியாத சுகாதார நிலைமைகளைக் கொண்டிருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ந்தனர், இதனையடுத்து வேறுவழியின்றி அவை கருணைக்கொலை செய்யப்பட்டன.
வெளிநாடொன்றில் தமிழரின் செயற்பாடு- அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை
ஓட்டுனர் இருக்கைக்கு மேலே உள்ள மேல்நிலைப் பெட்டியில் துணி மூடைகளில் பாம்புகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. விசாரணையில், சிங்கப்பூரில் உள்ள அறியப்படாத பெறுநருக்கு பாம்புகளை கொடுத்து உதவ பழனியப்பன் ஒப்புக்கொண்டது தெரியவந்தது. அந்த வேலைக்காக அவருக்கு மலேசிய ரிங்கிட் 300 (தோராயமாக 68 அமெரிக்க டொலர்கள்) கொடுக்கப்பட இருந்தது.
பழனியப்பனுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது கடத்தப்பட்ட ஒவ்வொரு பாம்பிற்கும் சிங்கப்பூர் பண மதிப்பில் $50,000 வரை அபராதம் கூட விதிக்கப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்