முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

C 535 மோடி வழங்கிய உறுதிமொழி

மோடி வழங்கிய உறுதிமொழி - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யால பருவத்துக்கான உரங்களை விரைவில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நீர்ப்பாசனத் துறை எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் இன்று (01) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்த உரமானது இந்திய கடனுதவியுடன் வழங்கப்படுவதுடன், இலங்கைக்கு கிடைத்தவுடன் 20 நாட்களுக்குள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உமா ஓயா மற்றும் மொரகஹகந்த திட்டங்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்து மகா பருவத்திற்கான நன்மைகளை வழங்க முடியும் என கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி வழங்கிய உறுதிமொழி - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
ஜனாதிபதி பணிப்புரை மொரண, மஹகல்கமுவ போஷித எல, மஹகோன வெவ, விலகண்டிய வெவ மற்றும் கொதிகமுவ வெவ ஆகிய திட்டங்கள் ஒரே நேரத்தில் பூர்த்தி செய்யப்பட உள்ளன. வெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். கடந்த மூன்று நாட்களில் மொத்த மின் உற்பத்தியில் 80 விகித நீர் மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் தேசிய மின்வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்தது தெரியவந்தது. மிதக்கும் சோலார் பேனல் திட்டங்களை மேம்படுத்தவும் கூரையில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்களின் நன்மைகளை அதிகரிக்கவும் நுகர்வோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார். மோடி வழங்கிய உறுதிமொழி - ஜனாதிபதி வெளியிட்ட தகவல் இம்மாதப் பருவத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் கீழுள்ள 50 விகித நீர்ப்பாசன நிலங்களில் ஏற்கனவே விதைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் யு.டி.சி ஜெயலால் மற்றும் அமைச்சின் லைன் ஏஜென்சிகளின் அதிகாரிகளும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?