முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 419 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் - தமிழர்களுக்கு முக்கிய செய்தி
தமிழினப் படுகொலை அரங்கேறிய முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்டு வணங்குவதற்கு இம்முறை பெருமளவான மக்கள் அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மாத்திரமன்றி தமிழர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் நசுக்கும் செயற்பாடுகளில் சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது என தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன் குற்றம்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “மே -12 ஆம் திகதி (இன்று) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் ஆரம்பிக்கின்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பும் விதமாகவும் இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவும் சிங்களப் பேரினவாதம் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலை தெளிவாகத்தான் செயற்படுத்துகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் - தமிழர்களுக்கு முக்கிய செய்தி தென்னிலங்கையில் என்ன தான் பிரச்சினை நடந்தாலும், எவ்வளவு தான் கலவரம் நடந்தாலும் எங்களுடைய உணர்வுகளை அடக்குவதில் பேரினவாத சக்திகள் இணைந்து செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே இந்தக் காலப்பகுதியில் குறிப்பாக இளைஞர்களைத் திருப்பி திருப்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் செய்யும் செயற்பாடுகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளையும் தமிழ்த் தேசிய செயற்பாடுகளையும் குழப்பும் வகையிலான தடை உத்தரவுகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்தக்கூடும். இம்முறை முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்டு வணங்குவதற்காக அந்த மண்ணை பார்ப்பதற்காக அதிகளவான மக்கள் வருவார்கள். காரணம் உங்களுக்குத் தெரியும். தென்னிலங்கையில் சில சம்பவங்கள் இம்மாதத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் - தமிழர்களுக்கு முக்கிய செய்தி ஆகவே இப்படியான நிகழ்வுகள் இருக்கும்போது நமது இளைஞர்கள் சரியானதொரு தீர்க்கமான முடிவில் இருக்க வேண்டும். எனவே வன்முறைகளைத் தவிர்த்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடக்க பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை கேட்டுக்கொள்கின்றது” என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?