முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 377 சிறப்பாக இடம்பெற்றது சமத்துவ மே தினம்

· கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது சமத்துவ மே தினம்
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் சமத்துவ மே தினம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் பி.ப 2 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. தாரளவாதம், இன ஒடுக்குமுறை, இராணுவமயவாக்கம், அந்நிய ஆதிக்கம், மக்கள் விரோத போக்கு, சர்வதிகாரம், எல்லாவற்றுக்கும் எதிராக போராடுவோம் இது மக்களின் காலம் என்ற பிரதான கோசத்துடன் சமத்துவக் கட்சியின் மே தினம் நடாத்தப்பட்டுள்ளது. இதன் போது ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் அமைப்பு, விவசாய அமைப்பு, கல்விச் சமூகம், உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் வரலாறு சந்தித்திராத பொருளாதார நெருக்கடியை நாட்டு மக்களின் மீது ஆளும்வர்க்கம் சுமத்தியுள்ளது. இதனால் தங்கள் அளப்பரிய பங்களிப்பை நாட்டுக்காகச் செலுத்துகின்றபோதும் உழைக்கும் மக்கள் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறார்கள். உணவுக்கே வழியற்ற ஆபத்தான நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குப் பொருத்தமான, நிலையான தீர்வைக் காண்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் இதுவரை பெரிதாக முயற்சிக்கவில்லை எனவே புதிய மாற்றமொன்றைக் கோரும் வகையில் மாற்றத்துக்கான சமத்துவ மேதின நிகழ்வை நடாத்துகின்றோம் எனக் குறிப்பிட்டாா்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?