முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 374வீடொன்றில் நிகழ்ந்த அனர்த்தம்

வீடொன்றில் நிகழ்ந்த அனர்த்தம் இருவருக்கு ஏற்பட்ட துயரம்
- மேலும் பலர் மல்வான, யட்டியான பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இடம்பெற்ற அனர்த்தத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.பலர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் 63 வயதுடைய வீட்டு உரிமையாளர் மற்றும் வீட்டை நிர்மாணிப்பதற்காக வந்திருந்த 51 வயதான பண்டாரகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்தவர்களாவர். வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதற்காக வெட்டப்பட்ட குழியில் குறித்த தொழிலாளி இறங்கியுள்ளார். இதன்போது குறித்த தொழிலாளி குழியில் மயங்கி விழுந்துள்ளதாகவும், அவரை மீட்பதற்காக குழியில் இறங்கிய மற்றுமொருவரும் அங்கு மயங்கி விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர், வீட்டு உரிமையாளரும் அவர்களை மீட்க குழிக்குள் இறங்கியுள்ள நிலையில் அவரும் உள்ளே மயங்கி விழுந்தார். குழியில் இருந்தவர்களை மீட்பதற்காக மேலும் இருவர் குழிக்குள் இறங்கியுள்ள நிலையில் அவர்களும் மயக்கமடைந்துள்ளனர். இதனையடுத்து மயக்கமடைந்தவர்களை மீட்க ஒக்ஸிஜன் சுவாசக் கருவியுடன் குழிக்குள் இறங்கிய மற்றுமொரு நபர் அவர்களை மீட்டுள்ளார். மயக்கமடைந்தவர்கள் பின்னர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளரும் முதலில் குழியில் இறங்கிய பணியாளரும் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த மேலும் இருவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பியகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?