செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவி இறப்புக்கு ராக்கிங் காரணமா?
செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவி தற்கொலைக்கு ராக்கிங்தான் காரணம் என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு சட்டக்கல்லூரியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவாதூர் கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் மகள் கவிப்பிரியா (வயது19) என்பவர் செங்கல்பட்டு சட்டக் கல்லூரி விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி அவர் தனது விடுதி அறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கவிப் பிரியாவை நீண்டநேரமாக காணவில்லை என்பதால் அவரது அறைக்கு சென்று பார்த்த சக மாணவிகள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். ஆனால், கவிப்பிரியா இறந்துவிட்டார்.
மன உளைச்சல்
இதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் தாம் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதால் விடுதியை காலி செய்துவிட்டு ஊருக்கே வந்து விடுவதாக தன் தந்தையிடம் தொலைபேசியில் கூறியுள்ளார் கவிப்பிரியா. ஆனால் தேர்வு நடைபெற இருப்பதனால் தேர்வு முடியும் வரை பொறுத்து இருக்கும்படி நண்பர்களும் பெற்றோர்களும் கூறியுள்ளனர். சக மாணவிகள் ரேக்கிங் செய்ததாலேயே தங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்