முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b677

முல்லைத்தீவில் ஒரு இரவில் இடம்பெற்ற இரு பயங்கர சம்பவங்கள்!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து இரு கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் பாரிய அச்சத்தில் உள்ளனர். நேற்று இரவு (21-12-2021) திங்கட்கிழமை ஆனந்தபுரம் 06 ஆம் வட்டாரப்பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் ஓட்டினை பிரித்து உள் நுளைந்த கொள்ளையர்கள் மூவர் கத்தியினை காட்டி வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி அவர்களின் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளார்கள். இதன்போது பெறுமதியான மூன்று தொலைபேசிகள், நான்கு பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் ஏ.ரி.எம். அட்டைகள், கடவுச்சீட்டு, அடையாள அட்டைகள், வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த மதுபான போத்தல்கள் உள்ளடங்கலான 6இலட்சத்து 92 ஆயிரம் பெறுதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். வீட்டில் இருந்தவர்கள் அண்மையில் தான் வெளிநாடு ஒன்றில் இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வீட்டில் சி.சி.ரிவி கமராக்கள் பொருத்தப்பட்டபோதும் கமாரக்கள் சில அடித்து நொருக்கப்பட்டுள்ளதுடன், ஒளிப்பதிவு சேமிக்கும் காட்டிஸ்கையும், கருவியினையும் திருடர்கள் திருடிசென்றுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை, கைவேலி 2 ஆம் வட்டாரப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்து 20 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றம் 5 ஆயிரம் ரூபா பணங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று(21) அதிகாலை 4.30 மணிக்கும் இடையில் பதிவாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பம் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?