முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b662

கணவனை கோடாரியால் கொத்தி கொன்ற மனைவி: வெளியான திடுக்கிடும் பின்னணி!
கேரளாவில் பிரியாணி தராமல் சாப்பிட்ட கணவனை கோடாரியால் கொத்தி மனைவி கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச்சம்பவம் கேரள மாநிலத்தின் கோட்டயம் புதுப்பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை (14-12-2021) காலை இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் புதுப்பள்ளி பெரும்காவு பகுதியைச் சேர்ந்த சிஜி என்கிற மத்யூ ஆபிரகாம் என்ற 48 வயதான நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மத்யூ ஆபிரகாம் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த போது தாராமல் சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை கோடாரியால் கொத்தி கொலை செய்து விட்டு குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த மத்யூ ஆபிரகாமின் சகோதரரின் மனைவி சிஜி இரத்த வெள்ளத்தில் கிடந்ததை அவனித்துள்ளார். பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மனைவியான ரோசன்னாவை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்களை அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர் பொலிஸார் விசாரணையில் தெரிவித்தது, மத்யூ ஆபிரகாமும் ரோசன்னாவிற்கும் இடையே அண்மை நாட்களாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அது பாரபக்ச, ஒழுக்கக்கேடு, தனது குடும்பத்தை விட சகோதரரின் குடும்பத்தை சிஜி அதிகமாக கவனித்தமையே கொலைக்கான காரணங்கள் என கோட்டயம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து தொடர்ந்து 3 நாட்கள் வீட்டில் சமைக்கவில்லை. சம்பவ இடம்பெற்ற திகதி அன்று, சிஜி வெளியிலிருந்து பிரியாணி வாங்கி வந்திருந்தார். தனக்கு தராமல், சிஜியும், மகனும் பிரியாணியை சாப்பிட்டு விட்டு, மீதியை அருகிலுள்ள சகோதரன் வீட்டிற்கு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்துகோடாரியால் சிஜியின் தலையை கொத்தி கொலை செய்துள்ளதாக ரோசன்னா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மனைவி ரோசன்னாவிற்கு மனநல பிரச்சனைகளும் உள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?