முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b646

கூட்டு sponsor திட்டத்தின் கீழ் ஏழு ஆஸ்திரேலிய அகதிகள் கனடாவில் குடியமர்வு!
ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து, பப்புவா நியூ கினியில் கடந்த எட்டு வருடங்களாக வாழ்ந்துவந்த ஏழு அகதிகள் சிறப்பு கூட்டு ஸ்பொன்ஸர் ஏற்பாட்டின் கீழ் கனடாவில் மீள்குடியமர்த்தப்படுகின்றனர். மனுஸ் - நவுறு தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில்லை என்ற ஆஸ்திரேலிய அரசின் கடுமையான அறிவிப்பினை அடுத்து, ஆஸ்திரேலிய - கனடிய பொது அமைப்புக்களின் கூட்டு முயற்சியால் பல அகதிகள் கனடாவில் குடியமர்த்தப்பட்டுவருகின்றனர். படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்களை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில்லை என்று கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட முடிவையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்த சுமார் மூவாயிரத்து 127 அகதிகள் மனுஸ் மற்றும் நவுறு தடுப்புமுகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவின் இந்த எல்லை கடந்த அகதிமுகாம்கள் குறித்தும் இதனை நிர்வகிக்கும் பொறிமுறை குறித்தும் மனித உரிமைகள் அமைப்புக்கள் முதற்கொண்டு ஐ.நா. வரை பல அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேநேரம் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் Turnbull மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோருக்கு இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், சுமார் ஆயிரம் மனுஸ் மற்றும் நவுறு அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டனர். இந்தப்பின்னணியில் மீள்குடியமர்வதற்கான வாய்ப்பு எதுவுமின்றி நிர்க்கதியான நிலையில் இருந்த பல அகதிகள், private sponsorship என்ற திட்டத்தின்கீழ் Refugee Council of Australia, MOSAIC, Ads Up Canada Refugee Network ஆகிய அமைப்புக்களின் கூட்டு முயற்சியுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கனடாவில் மீள்குடியேறி வருகின்றனர். அகதிகளுக்கான இந்த கூட்டு ஸ்பொன்ஸர் பொறிமுறைக்கு அகதிகள் நல அமைப்புக்கள் இதுவரை சுமார் 30 லட்சம் டொலர்கள் திரட்டியுள்ளன. கோவிட் காரணமாக தாமதமடைந்திருந்த இந்த கூட்டு ஸ்பொன்ஸர் பொறிமுறையின் ஊடான மீள்குடியமர்வு திட்டம் மீண்டும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?